By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
Share
Notification
Latest News
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > தீவகச் செய்தி > ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
தீவகச் செய்தி

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

Last updated: 2020/11/12 at 6:18 PM
Published November 12, 2020 318 Views
Share
2 Min Read
SHARE

தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்குட்பட்ட பிரதேச சபையான குறித்த சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவுகளை நேற்றையதினம் (11) சபையின் தவிசாளர் மருதயினார் ஜெயகாந்தன் சபையில் சமர்ப்பித்திருந்தார்.

இதையடுத்து சபை உறுப்பிர்னர்களிடம் விவாதத்திற்கு விடப்பட்ட வரவுசெலவு திட்ட முன்மொழிவு சபையில் வாதப்பிரதிவாதங்களுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 7 உறுப்பினர்களையும், தமிழரசுக் கட்சியின் 5 உறுப்பினர்களையும், அகில இலங்கை தமிழ் தேசிய காங்கிரஸ் உரு உறுப்பினர் என 13 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள சபையில், கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஒரு தனிக்கட்சியால் ஆட்சியமைப்பதற்கு தேவையான முழுமையான ஆசனப் பலத்துடன்  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வெற்றிகண்டிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பில் சபையின் தவிசாளர் ஜெயகாந்தன் கருத்து தெரிவிக்கையில் – எமது பிரதேச சபைக்குட்பட்ட மக்களின் சுகாதாரம் மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட சேவைகளையும் தேவைப்பாடுகளையும் நாம் எமக்குள்ள வழங்களைக்கொண்டு திறம்பட செய்து வருகின்றோம்.

எமது சபையும் மிகவும் வருமானம் குறைந்த சபையாக காணப்படுவதால் இருக்கின்ற வருமானங்களை கொண்டே சபையின் நடவடிக்கைகள் முன்னெடுக்வேண்டியுள்ளது.

அதுமட்டுமல்லாதது புதிய பல வருமானங்களை ஈட்டக்கூடிய நலத்திட்டங்களுக்கான முன்மொழிவுகளை நாம் உள்ளுராட்சி மன்ற அமைச்சிடமும் ஏனைய அமைச்சுக்களிடமும் கோரியுள்ளோம்.

குறிப்பாக எமது கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மத்திய அரசில் ஒரு பலம் மிக்க அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருப்பதனால் அவரூடாக நாம் எமது பகுதிக்கான பல்வேறு வருவாயை ஈட்டக்கூடிய திட்டங்களை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை ஏற்படுத்தவுள்ளோம். கடந்த காலங்களிலும் அவ்வாறான பல திட்டங்களை நாம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடக எமது பகுதிக்கு பெற்றுக்கொடுத்து எமது பிரதேச மக்களின் தேவைகளை நிறைவுசெய்து கொடுத்திருக்கின்றோம்.

அந்தவகையில் எமது பிரதேசத்தினதும் மக்களினதும் நலன்களை கருத்திற்கொண்டு எமது கட்சியின் உறுப்பினர்களோடு சபையிலுள்ள ஏனைய கட்சி சர்ந்த உறுப்பினர்களாலும்  என்னால் முன்வைக்கப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

You Might Also Like

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு!

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவத்தையொட்டி அரை மணிநேரத்துக்கு ஒரு சேவை!

குறிகாட்டுவான் துறைமுக மீளமைப்பு பணி ஆரம்பம்!!

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழாவை முன்னிட்டு ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்

குறிகாட்டுவானில் சுற்றுலாப் பயணிகள் இளைப்பாறும் மண்டபம்அமைப்பதற்கான திட்டமிடல்!!

தீவகத்தின் சபைகளில் தமிழரசு தனித்தே ஆட்சியமைக்கும் – உறுப்பினர்கள்தெரிவிப்பு!

SUB EDITOR November 12, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article பாடசாலைகளை துப்பரவு செய்யும் சிரமதானப் பணிகள் தொடர்கின்றன.
Next Article வீட்டுத்தோட்ட பயிற்செய்கைக்கான விதையினங்கள் வழங்கப்பட்டன
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

You Might Also Like

தீவகச் செய்தி

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

June 20, 2025
தீவகச் செய்தி

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

June 20, 2025
தீவகச் செய்தி

ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு!

June 20, 2025
தீவகச் செய்தி

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவத்தையொட்டி அரை மணிநேரத்துக்கு ஒரு சேவை!

June 20, 2025
தீவகச் செய்தி

குறிகாட்டுவான் துறைமுக மீளமைப்பு பணி ஆரம்பம்!!

June 18, 2025
தீவகச் செய்தி

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழாவை முன்னிட்டு ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்

June 18, 2025
தீவகச் செய்தி

குறிகாட்டுவானில் சுற்றுலாப் பயணிகள் இளைப்பாறும் மண்டபம்அமைப்பதற்கான திட்டமிடல்!!

June 17, 2025
தீவகச் செய்தி

தீவகத்தின் சபைகளில் தமிழரசு தனித்தே ஆட்சியமைக்கும் – உறுப்பினர்கள்தெரிவிப்பு!

June 16, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?