By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: வவுனியாவில் வீதியில் நின்றவர்களுடன் கைகலப்பில் ஈடுபட்ட உயர்தர மாணவர்கள்!
Share
Notification
Latest News
அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!
தீவகச் செய்தி
தீ பிடித்த அமெரிக்கன் போயிங்க் விமானம் – ஆபத்து இல்லை!
உலகச் செய்தி
நெடுந்தீவில் நீர்த்தாங்கி கையளிப்பு.
நெடுந்தீவு
விபத்தில் ஆசிரியர் பலி.
வன்னிச் செய்திகள்
பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டன – தாய்லாந்து, கம்போடியா!!
உலகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > வன்னிச் செய்திகள் > வவுனியாவில் வீதியில் நின்றவர்களுடன் கைகலப்பில் ஈடுபட்ட உயர்தர மாணவர்கள்!
வன்னிச் செய்திகள்

வவுனியாவில் வீதியில் நின்றவர்களுடன் கைகலப்பில் ஈடுபட்ட உயர்தர மாணவர்கள்!

Last updated: 2023/12/07 at 10:48 AM
Published December 7, 2023 508 Views
Share
1 Min Read
SHARE

வவுனியா நகரை அண்டிய பிரபல பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்களின் ஒன்றுகூடலின் போது பாடசாலைக்கு முன்பாக வீதியில் நின்றவர்களுடன் மாணவர்கள் கைகலப்பில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகரை அண்டிய பிரபல பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்களுக்கான ஒன்றுகூடல் நேற்றுமுன்தினம் (டிசம்பர் 5) மதியம் இடம்பெற்றது.

இதன்போது உயர்தர மாணவர்கள் சொகுசு கார்கள் மற்றும் அதியுயர் வேகம் கொண்ட மோட்டர் சைக்கிள்கள் என்பவற்றுடன் பாடசாலைக்கு வருகை தந்ததுடன், பாடசாலை முன்பாக அவற்றைச் செலுத்தி போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளனர்.

இதன்போது பாடசாலையில் ஏனைய வகுப்பு மாணவர்களை ஏற்ற வந்த பெற்றோர் ஒருவருடன் விபத்து ஏற்பட்டதையடுத்து, பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு அப் பகுதியில் இரு தரப்பும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்துக்குத் தெரியப்படுத்தியதையடுத்து அந்தப் பகுதிக்குப் பொலிஸார் வருகை தந்து நிலைமையைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தின் போது, பாடசாலை வளாகத்துக்குள் இருந்து வருகை தந்து உயர்தர மாணவர்கள் பல தடவைகள் பெற்றோருடன் முரண்பட்ட போதும், பாடசாலை நிர்வாகம் மற்றும் கடமையில் இருந்த பதில் அதிபர், பழைய மாணவர் சங்கத்தினர் ஆகியோர் ஆக்கபூர்வமான நடவடிக்கைளை எடுக்கவில்லை எனவும், நிலைமையைக் கட்டுப்படுத்தவில்லை எனவும் அப் பாடசாலையின் பெற்றோர்களும், பாடசாலை சமூகத்தினரும் குற்றம்சாட்டினர்.

அந்த மாணவர்கள் பின்னர் குறித்த சொகுசு கார்கள் மற்றும் மோட்டர் சைக்கிள்களில் பயணித்து வைவரவப்புளியங்குளம் பகுதியிலும் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்திக் குழப்பம் விளைவித்தனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

You Might Also Like

விபத்தில் ஆசிரியர் பலி.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒருவர் உயிர்மாய்ப்பு!

முல்லைத்தீவில் கிணற்றில் இருந்து தாயும் 2 பிள்ளைகளும் சடலமாக மீட்பு !

மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்!

செட்டிகுளத்தில் 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி இராணுவ முகாமில் கஞ்சாவுடன் சிப்பாய் கைது!!

கொக்குத்தொடுவாய் புதைகுழி பகுப்பாய்வு அறிக்கை வெளிவந்தது!

வவுனியாவில் வீதியோரக் கடைகள் அகற்றல் – தவிசாளர் அதிரடி!!

Anarkali December 7, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் சம்பா அரிசி இறக்குமதி செய்யப்படும்!
Next Article வாள் தயாரிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!- யாழ். மாவட்ட செயலர் தெரிவிப்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!
நெடுந்தீவில் நீர்த்தாங்கி கையளிப்பு.
விபத்தில் ஆசிரியர் பலி.
மனித புதைகுழியிலிருந்து இதுவரை 101 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்

You Might Also Like

வன்னிச் செய்திகள்

விபத்தில் ஆசிரியர் பலி.

July 27, 2025
வன்னிச் செய்திகள்

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒருவர் உயிர்மாய்ப்பு!

July 25, 2025
வன்னிச் செய்திகள்

முல்லைத்தீவில் கிணற்றில் இருந்து தாயும் 2 பிள்ளைகளும் சடலமாக மீட்பு !

July 24, 2025
வன்னிச் செய்திகள்

மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்!

July 24, 2025
வன்னிச் செய்திகள்

செட்டிகுளத்தில் 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது!

July 23, 2025
வன்னிச் செய்திகள்

கிளிநொச்சி இராணுவ முகாமில் கஞ்சாவுடன் சிப்பாய் கைது!!

July 22, 2025
வன்னிச் செய்திகள்

கொக்குத்தொடுவாய் புதைகுழி பகுப்பாய்வு அறிக்கை வெளிவந்தது!

July 16, 2025
வன்னிச் செய்திகள்

வவுனியாவில் வீதியோரக் கடைகள் அகற்றல் – தவிசாளர் அதிரடி!!

July 15, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?