முல்லைத்தீவு, இருட்டுமடு தமிழ் வித்தியாலய மாணவர்கள் இருவர் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகள் பெற்றுள்ளனர்.
பாடசாலையின் கடந்த 25 ஆண்டுகால வரலாற்றில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகள் பெற்றுள்ளமை இதுவே முதல்முறையாகும்.
மாணவர்களைத் தயார்ப்படுத்திய ஆசிரியைக்கும், பாடசாலைக்கும் பாடசாலைச் சமூகத்தினர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.