க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நிறைவடையும் வரையில் மின்சாரத் தடையை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று கோரித் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்திருந்தது.
இந்த மனு இன்று (பெப்ரவரி 3) விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதே உயர்நீதிமன்றம் மனுவை நிராகரித்தது.
மனு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் நாள்களில் வழமைபோன்று மின் தடை நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.