இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
மின்வெட்டை வழமைப் போலவே தொடரவிருப்பதாகவும், அதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்றும் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை கோரியுள்ளது.
ஆனால் மின்சார சபையின் கோரிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.
பரீட்சைக்கு தோற்றும் சுமார் 3 லட்சத்து 10 ஆயிரம் பரீட்சார்த்திகளின் மனித உரிமைகளை மீற முடியாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.