By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: மாவீரர் நாள் தற்போது அரசியல்வாதிகளுக்கு தீனி – முன்னாள் போராளிகுலசிங்கம் நவகுமார் !
Share
Notification
Latest News
இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!
நெடுந்தீவு
தனுஷ்கோடியில் இலங்கையர் மூவர் அகதிகளாக தஞ்சம் !
இந்திய செய்தி
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !
இலங்கைச் செய்தி
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம்
மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > மாவீரர் நாள் தற்போது அரசியல்வாதிகளுக்கு தீனி – முன்னாள் போராளிகுலசிங்கம் நவகுமார் !
யாழ்ப்பாணம்

மாவீரர் நாள் தற்போது அரசியல்வாதிகளுக்கு தீனி – முன்னாள் போராளிகுலசிங்கம் நவகுமார் !

Last updated: 2024/10/28 at 4:15 PM
Published October 28, 2024 204 Views
Share
3 Min Read
SHARE

மாவீரர் நாள் தற்போது வியாபாரம் ஆகி அரசியல்வாதிகளுக்கு தீனி ஆகிவிட்டது. அரசியல்வாதிகள் தமது அரசியலைப் பார்க்க வேண்டுமே தவிர மாவீரர்களின்தியாகங்களை வைத்து அரசியல் செய்ய முற்படக்கூடாது. அதனை திறமையாகமாவீரர்களின் பெற்றோர்கள் செய்வார்கள் என முன்னாள் போராளி குலசிங்கம்நவகுமார் (பாலன்)  தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்றையதினம் (ஒக். 27) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

முன்னாள் போராளி கருத்து தெரிவிக்கையில், 2009 யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் இதுவரை நான் எனது வீட்டிலேயே மாவீரர் நாளை நான்அனுஷ்டித்துள்ளேன். இதனை யாரும் தடுக்க முடியாது. மாவீரர் நாள் தற்போதுவியாபாரம் ஆகிவிட்டது. அரசியல்வாதிகளுக்கு தீனி ஆகிவிட்டது.

எமக்கு முன்னதாக ஒரு அரசியல் முன்னெடுக்கப்பட்டது அதில் தமிழ் மக்களுக்குதீர்வு கிடைக்காத நிலையில் நாம் வலிந்து ஆயுத போராட்டத்தை மேற்கொண்டுநிழல் அரசாங்கத்தை அமைத்தோம்.

அந்தத் தலைமை போர்க்களத்துக்கு மாவீரர்களை அனுப்பிய பெற்றோர்களைகௌரவித்தது. அது தகுதியானதோர் கௌரவிப்பு. அது மாவீரர்களின்பெற்றோர்களுக்கு ஒரு விமோசனத்தை அளித்ததாக நான் நினைக்கின்றேன். இன்று மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிப்பு செய்யும் அரசியல்வாதிகள்எந்த காலகட்டத்திலும் போர்களத்தில் நின்றவர்கள் அல்ல. அவர்கள் தங்கள்பிள்ளைகளை போர்க்களத்துக்கு அனுப்பியவர்களும் அல்ல. அவர்கள்குடும்பத்தில் யாரும் காணாமல் ஆக்கப்படவில்லை. அரசியல்வாதிகள் தங்கள்அரசியல் நலன்களுக்காக மாவீரர்களின் தியாகங்களையும் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர். முன்னாள் போராளி என்ற வகையில் இதனை நான்வன்மையாக கண்டிக்கின்றேன்

நான் மாவீரர்கள் பெற்றோர்களிடம் அன்பாக கூறுவது என்னவென்றால் தற்போதுஉங்களை தேடி அரசியல்வாதிகள் வருவதாக அறிகின்றேன். இவருக்குவாக்களியுங்கள், அவருக்கு வாக்களியுங்கள், இவர் வந்தால் தான் மாவீரர்நாளுக்கு விளக்கேற்ற முடியும் என்ற கதைகளை கூறி பாராளுமன்றஉறுப்பினராகுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். இதற்கு மாவீரர்களின் பெற்றோர்நல்ல தக்க பதிலை வழங்க வேண்டும் மாவீரர்கள் பெற்றோருக்கு மாவீரர்தூயமிலங்களுக்கு சென்று அஞ்சலிப்பதற்கு முடியும். அதனை யாரும் தடுக்கமுடியாது.

எந்த வரவு செலவுத் திட்ட நிதியை பயன்படுத்தி நீங்கள் துயிலுமில்லங்களைகட்டப் போகின்றீர்கள். புலம்பெயர் உறவுகள் பணம் தருவார்கள் என்றால்அதற்கான அனுமதியை பெற முடியுமா? பெரும்பாலான துயிலும் இல்லங்கள்உள்ளூராட்சி சபைகளின் கட்டுப்பாட்டிலேயே காணப்படுகிறது. அதற்குபொறுப்பாக உள்ள பிரதேச சபை செயலாளர்கள் ஒத்துழைப்பார்களா?

சில சமயங்களில் மாவீரர் தூயிலும் இல்லங்களில் அரசியல்வாதிகள் சண்டைபிடிக்கின்றனர்.

மாவீரர்களின் பெற்றோர்களிடம் நாம் கண்ணியமாக வேண்டுவது உங்கள்பிள்ளைகளின் தியாகங்களையும் உணர்வுகளையும் வித்துப்பிழைக்கின்றவகையில் செயல்படாதீர்கள்.

நான் 20 வருடங்கள் போர்க்களத்தில் நின்ற போராளி. இதனை சொல்வதற்குஎனக்கு தகுதி இருக்கு நான் நம்புகிறேன். மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழுவில்அரசியல்வாதிகள் இருப்பதை தவிர்த்து மாவீரர்களின் பெற்றோர்களை அதில்போடவேண்டும்.

அரசியல்வாதிகள் தமது சமகால அரசியலைப் பார்க்க வேண்டும். மாவீரர்களின்தியாகங்களை வைத்து அரசியல் செய்ய முற்படக்கூடாது. அதனை திறமையாகமாவீரர்களின் பெற்றோர்கள் செய்வார்கள் என தான் நம்புகிறேன் – என்றார்.

தமிழ் தேசத்துக்காக மூன்று மாவீரர்களை வித்தாக்கிய சிங்கள தாய் சீலாவதிநடராசாவும்  ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார்.

தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் வீட்டுக்கு வந்து தமக்கு வாக்களியுங்கள்என்பார்கள். அதற்கு பின்னர் எவரும் திரும்பி பார்க்கமாட்டார்கள். இந்தமண்ணுக்காக மூன்று மாவீரர்களை கொடுத்தேன். நான் தற்போது மிகவும்வறுமையில் உடல் நலிவுற்று இயலாமல் இருக்கின்றேன்.

ஆனால் அரசியல்வாதிகள் எமக்கு உதவி செய்யத் தேவையில்லை. மாவீரர்களின்பெயர்களை சொல்லி அரசியல்வாதிகள் குளிர்காய வேண்டாம். மாவீரர் துயிலும்இல்லங்கள் காடாகி உள்ளது. மாவீரர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களையேஇணைத்து மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழுவை உருவாக்கவேண்டும்.

நான் சிங்கள பெண்ணாக இருந்தாலும் இந்த மண்ணிலேயே சாவேன். அதுவரைநிம்மதியாக எமது பிள்ளைகளுக்கு விளக்கேற்றவிடுங்கள். மாவீரர்களின்பெயரைச் சொல்லி எல்லாம் செய்வோம் எல்லாம் செய்வோம் எனஅரசியல்வாதிகள் எவரும் வரக்கூடாது – என்றார்.

You Might Also Like

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

மகஜர் கையளிப்பு!

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

SUB EDITOR October 28, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article முட்டை விலை குறைவடைந்துள்ளது – அகில இலங்கை முட்டை வியாபாரிகள்சங்கம்!
Next Article நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் “நல்வாழ்வுநம்கையில்” திட்டம் ஆரம்பம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!
மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

You Might Also Like

யாழ்ப்பாணம்

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!

June 28, 2025
யாழ்ப்பாணம்

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

June 28, 2025
யாழ்ப்பாணம்

மகஜர் கையளிப்பு!

June 27, 2025
யாழ்ப்பாணம்

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

June 27, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

June 26, 2025
யாழ்ப்பாணம்

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

June 26, 2025
யாழ்ப்பாணம்

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

June 26, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

June 25, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?