கண்ணிவெடியகற்றல் பணியை ஆரம்பித்து 13 வருடங்கள் நிறைவில் HALO TRUST மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியாளர்களஇன் சேவையினைப் பாராட்டி கெளரவிப்பு முகமாலைப்பகுதியில் அமைந்துள்ள HALO TRUST அலுவலகத்தில் இந்நிகழ்வுஇன்றையதினம் (ஜூன் 18) இடம்பெற்றது.
HALO TRUST நிறுவனம் மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியைஆரம்பித்து 13 வருடங்கள் நிறைவு நாளும் , நிறுவனத்தில் 20 வருடங்களுக்கு மேலாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும்பணியாளர்களை கெளரவிக்கும் நிகழ்வும் சிறப்புற இடம்பெற்றது.
நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் Peter Hugh Scott Baker தலைமையில்நடைபெற்ற நிகழ்வில்பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கலந்துகொண்டார்.மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் S. முரளிதரன், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.ஸ்ரீமோகனன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் த.ஜெயசீலன், கனேடிய துணைத்தூதுவர்உள்ளிட்ட பலர் விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் ஆளுநர் உள்ளிட்ட விருந்தினர்கள் பாண்ட் வாத்தியஅணிவகுப்புடன் வரவேற்கப்பட்டதோடு HALO TRUST நிறுவனத்தால்முகமாலையில் முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டம் தொடர்பாக அனைவருக்கும்விளக்கமளிக்கப்பட்டது. இதன் பின்னர் விருந்தினர்களால் பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.