By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: மக்களுக்கு போதையூட்டுகின்றனர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்!- டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
Share
Notification
Latest News
மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!
யாழ்ப்பாணம்
சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!
இலங்கைச் செய்தி
மகஜர் கையளிப்பு!
யாழ்ப்பாணம்
கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!
இலங்கைச் செய்தி
உப்பின் புதிய விலை அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > தீவகச் செய்தி > மக்களுக்கு போதையூட்டுகின்றனர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்!- டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
தீவகச் செய்தி

மக்களுக்கு போதையூட்டுகின்றனர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்!- டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Last updated: 2023/04/28 at 3:52 PM
Published April 28, 2023 288 Views
Share
3 Min Read
SHARE

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மக்களுக்கு போதையூட்டக்கூடியவாறு செயற்படுகிறார்கள் என கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இன்று வேலனைபிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பெரும் போகத்தில் அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நிகழ்ச்சித் திட்டம் மற்றும் ராணுவத்தின் மேலதிக பங்களிப்புடன் வறிய குடும்பங்களுக்கான இலவச அரிசிப்பொதி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வறிய மக்களுக்கு உதவும் முகமாக நாடு முழுவதும் 20 லட்சம் குடும்பங்களை தெரிவு செய்து ஒரு குடும்பத்திற்கும் தலா 10 கிலோ எடையுடைய அரிசி வீதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாரபட்சமற்ற விதத்தில் ஜனாதிபதி இந்த  முடிவினை எடுத்துள்ளார் இந்த முடிவினை எடுத்தது கிளிநொச்சி  விவசாயிகளோடு ஜனாதிபதி களத்தில் சந்தித்தபோது நெல்லுக்கான உத்தரவாத விலையினை நூறு ரூபாவாக அறிவித்து இந்த திட்டத்தையும் அவர் அதில் அறிவித்திருந்தார்.

அந்தவகையில் பாரபட்சமற்ற வகையில் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றார். வட மாகாணத்தை பொறுத்தவரையில் இலங்கையினுடைய ஏனைய மாவட்டங்களை விட சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது. இந்த திட்டம் சிறப்பாக நடைபெறுகின்றது. அந்தவகையில் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிபர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றேன்.

இந்த பிரதேச மக்கள் எதிர்கொள்கின்ற பல பிரச்சனைகள் காணப்படுகின்றன. அதாவது ஒரு தேவையற்ற யுத்தத்தில்  விசேடமான பிரச்சனைகள் எதிர்கொள்ளப்பட்டது. இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு நாடு தழுவிய ரீதியில் பொருளாதார ரீதியான பாதிப்புகளுக்கு எங்கள் மக்கள் முகம் கொடுத்து வருகின்றார்கள்.

அந்தவகையில் இந்த நாடு கடந்த கால தேவையற்ற அழிவு யுத்தம் காரணமாக கொரோனா தொற்று காரணமாக ஆட்சி தலைவர்களின் நிதி மற்றும் பொருளாதார முறையான முகமைத்துவம் இல்லாத நிலை காரணமாக எங்களுடைய நாடு பொருளாதார ரீதியாக ஒரு அதாள பாதாளத்துக்கு சென்றுவிட்டது.

அந்த நேரத்தில் இந்த நாட்டுக்கு தலைமை தாங்கக்கூடிய பாதிப்பில் இருந்து மக்களை மீட்கக்கூடிய முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய வகையில் யாரும் இருக்கவில்லை. எல்லோரும் பின்னடித்த நேரத்தில் எங்களுடைய மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் முன் வந்ததை மக்கள் சார்பாக இந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு நான் பாராட்டை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

நாட்டுத் தலைவர்களுக்குள்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தான் இந்த இக்கட்டான நிலைமையில் இருந்து எங்களை முன்கொண்டு செல்லக்கூடிய ஒரு தலைவராக இருக்கின்றபடியினால் நாங்கள் அவரோடு நம்பிக்கையோடு நாங்கள் பயணிக்கலாம் என்பதையும் நான் இந்த சந்தர்ப்பத்தில் உங்களுக்கு தெளிவுபடுத்த வலியுறுத்த விரும்புகின்றேன்.

பாராளுமன்றத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கட்டைக்காடில் இருநூறு ஏக்கர் சீனாவுக்கும் கிளிநொச்சியில் 800 ஏக்கள் வெளிநாடுகளுக்கு கொடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.

அதில் எந்தவிதமான உண்மை இல்லை  நமது அரசாங்கத்தில் அவ்வாறு திட்டமும் இல்லை எந்தவிதமான அடிப்படையும் இல்லாமல் அவ்வாறான பொய்யை நாடாளுமன்ற உறுப்பினர் சிறினிகள் போன்ற சில தமிழ் உறுப்பினர்கள் சாணியல் போன்ற சில உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலே இப்படியான உரைகளை முன்னெடுப்பதன்  ஊடாக சாணி சிறினி போன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பொய் கூறி மக்களை தவறாக வழிநடாத்துகின்றனர்.

வாக்குகளை அபகரிக்க கூடிய வகையில் கருத்துக்களை வைத்து வருகின்றார்கள். ஆனபடியினால் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். போதை வஸ்து பற்றி பேசுகின்றோம் இவர்களுடைய இந்த கருத்துக்களும் மக்களுக்கு ஒரு போதை ஊட்டக்கூடிய வகையில் தான் அமைந்திருக்கின்றன.

ஆனபடியினால் விழிப்பாக இருக்க வேண்டும் என நான் தெரிவித்துக் கொள்கின்றேன். பொய்களை கூறி மக்களிடமிருந்து வாக்குகளை அபகரிப்பதற்காக அவர்கள் பொய்யான விடயங்களை பேசுகின்றார்கள் என்பதை  மக்கள் மிகவும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்- என்றார்.

You Might Also Like

நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!

வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணிக்கு ஏறியது கொடி!

நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!

வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.

வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!

நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

Anarkali April 28, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article சாகல ரட்நாயக்க புலம்பெயர் அமைப்புக்களுக்கு விடுத்த விசேட கோரிக்கை!
Next Article முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் வளி மாசடைதலைக் கண்காணிக்கும் கருவி!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!
சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!
மகஜர் கையளிப்பு!
கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

You Might Also Like

தீவகச் செய்தி

நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!

June 26, 2025
தீவகச் செய்தி

வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணிக்கு ஏறியது கொடி!

June 26, 2025
தீவகச் செய்தி

நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!

June 25, 2025
தீவகச் செய்தி

வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.

June 24, 2025
தீவகச் செய்தி

வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!

June 24, 2025
தீவகச் செய்தி

நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!

June 23, 2025
தீவகச் செய்தி

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

June 20, 2025
தீவகச் செய்தி

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

June 20, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?