By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: புதிய கல்வி மறுசீரமைப்பின் மூலம் தரமான கல்விக்கான அடித்தளம் அமைக்கப்படுகிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய
Share
Notification
Latest News
தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு
யாழ்ப்பாணம்
அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!
தீவகச் செய்தி
தீ பிடித்த அமெரிக்கன் போயிங்க் விமானம் – ஆபத்து இல்லை!
உலகச் செய்தி
நெடுந்தீவில் நீர்த்தாங்கி கையளிப்பு.
நெடுந்தீவு
விபத்தில் ஆசிரியர் பலி.
வன்னிச் செய்திகள்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > புதிய கல்வி மறுசீரமைப்பின் மூலம் தரமான கல்விக்கான அடித்தளம் அமைக்கப்படுகிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய
இலங்கைச் செய்தி

புதிய கல்வி மறுசீரமைப்பின் மூலம் தரமான கல்விக்கான அடித்தளம் அமைக்கப்படுகிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய

Last updated: 2025/07/20 at 12:47 PM
Published July 20, 2025 53 Views
Share
2 Min Read
SHARE

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்துறை கல்வி அமைச்சர் மற்றும் நாட்டின் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்:

ஒரு வகுப்பறையில் மாணவர் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைப்பது முக்கிய இலக்காகவும், 50-60 மாணவர்களுடன் தரமான கல்வி வழங்க முடியாது என்பதையும்.

புதிய கல்வி மறுசீரமைப்பை தென் மாகாண கல்வி அதிகாரிகளிடம் விளக்குவதற்காக நேற்று (ஜூலை 19) காலி தக்ஷினபாய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்.

இதில் உரையாற்றிய பிரதமர்,

“புதிய கல்வி மறுசீரமைப்புக்காக நீங்கள் வழங்கும் ஆதரவுக்கு முதலில் எனது நன்றியை தெரிவிக்கிறேன். எமது அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே இம்மாற்றங்களை திட்டமிட்டு, நிபுணர்களுடன் ஆலோசித்து, பல தரப்பினரின் கருத்துக்களைப் பெற்றே இந்தக் கொள்கைகள் உருவாக்கப்பட்டன.

பாடத்திட்ட மாற்றங்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களின் திறன் மேம்பாடு, கல்வி நிர்வாக அமைப்பின் சீரமைப்பு, உட்கட்டமைப்புப் வசதிகளை மேம்படுத்தல் மற்றும் எல்லா மாணவர்களுக்கும் சமமாக தரமான கல்வி வழங்கும் நோக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இது எமது அரசாங்கத்தின் தேவைக்காக அல்ல, நாட்டின் எதிர்காலத்திற்கான பொறுப்பாகும். சமூகத்தில் சிலர் இதனை நேர்மையாக புரிந்துகொண்டு ஆதரிக்கிறார்கள்; சிலர் தவறாக புரிந்து விமர்சிக்கிறார்கள்; மற்றவர்கள் அரசியல் நோக்கில் விமர்சிக்கிறார்கள்.

இந்த மாற்றம் சவாலான ஒன்றாக இருந்தாலும், அதை தவிர்க்க முடியாது. மக்கள் நம்பிக்கையுடன் எம்மைத் தேர்தலில் வெற்றிபெறச் செய்ததற்கான ஒரு பணி இது.

பல்வேறு வேலைகள் எங்களைக் காத்திருக்கின்றன. 16 ஆண்டுகளாக மாற்றப்படாத ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளின் பாடத்திட்டங்களை புதுப்பிக்க வேண்டும். ஆகஸ்ட் மாதம் முதல் பயிற்றுநர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டு, ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டம் நடைமுறையில் இருக்கும்,” என தெரிவித்தார்.

மேலும், நிகழ்வில் கருத்து தெரிவித்த உயர்கல்வி இருதையமைச்சர் திரு. நலின் ஹேவாகே கூறுகையில்,

“புதிய கல்வி மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, தொழில்துறை கல்வியை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேர்ச்சி பெறாத மாணவர்கள் தொழில்துறை கல்விக்கு மாற்றமாக, அவர்களின் திறமை மற்றும் ஆற்றலை அடிப்படையாகக் கொண்டு பாடசாலையில் இருந்தே தொழில்துறை கல்வியை கௌரவமாகக் கற்றுக்கொள்ளும் சூழல் ஏற்படுத்தப்படும்,” எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிஷ்சந்திர, நிஹால் கலப்பத்தி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ, தென் மாகாண பிரதம செயலாளர் சுமித் அலஹகோன், கல்வி அமைச்சு, பரீட்சைத் திணைக்களம், தேசிய கல்வி நிறுவனம், தென் மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் மாகாண கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

You Might Also Like

பதிவுச் சான்றிதழ் எந்த காலத்திற்கும் செல்லுபடியாகும் – புதிதாக எடுக்கவேண்டிய அவசியமில்லை !!

சர்வதேச விமான நிலையங்களில் பனைவள பொருட்கள் காட்சிக்கு நடவடிக்கை – அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு

வங்கி அட்டை பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டண வசூலிப்பு இல்லை !

40 நாடுகளுக்கு இலவச விசா வழங்க திட்டம் – அதனால் 66 மில்லியன் வருமான இழப்பு!!

சிறீதரன் எம்பி தொடர்பில் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு – அவர் மறுப்பு!!

நாட்டில் பொது மக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியே!- சரத் வீரசேகர

தனியார்துறை ஊழியர் குறைந்தபட்ச மாதச் சம்பளம் 27ஆயிரம்- 2025ஏப்ரல் முதல்!

மாரவில துப்பாக்கிச் சூட்டில் பெண் உயிரிழப்பு!

SUB EDITOR July 20, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நெடுந்தீவு தென்கிழக்கு முனியப்பர் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி – ஜூலை 21
Next Article அல்லைப்பிட்டியில் புதர்களுக்கு தீவைத்து சர்வசாதாரண வாழ்வை பாதித்த விசமிகள் – புகைமூட்டம் காரணமாக விபத்துக்கள், மருத்துவமனைக்கு அனுமதி!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு
அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!
நெடுந்தீவில் நீர்த்தாங்கி கையளிப்பு.
விபத்தில் ஆசிரியர் பலி.

You Might Also Like

இலங்கைச் செய்தி

பதிவுச் சான்றிதழ் எந்த காலத்திற்கும் செல்லுபடியாகும் – புதிதாக எடுக்கவேண்டிய அவசியமில்லை !!

July 27, 2025
இலங்கைச் செய்தி

சர்வதேச விமான நிலையங்களில் பனைவள பொருட்கள் காட்சிக்கு நடவடிக்கை – அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு

July 26, 2025
இலங்கைச் செய்தி

வங்கி அட்டை பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டண வசூலிப்பு இல்லை !

July 26, 2025
இலங்கைச் செய்தி

40 நாடுகளுக்கு இலவச விசா வழங்க திட்டம் – அதனால் 66 மில்லியன் வருமான இழப்பு!!

July 26, 2025
இலங்கைச் செய்தி

சிறீதரன் எம்பி தொடர்பில் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு – அவர் மறுப்பு!!

July 26, 2025
இலங்கைச் செய்தி

நாட்டில் பொது மக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியே!- சரத் வீரசேகர

July 25, 2025
இலங்கைச் செய்தி

தனியார்துறை ஊழியர் குறைந்தபட்ச மாதச் சம்பளம் 27ஆயிரம்- 2025ஏப்ரல் முதல்!

July 24, 2025
இலங்கைச் செய்தி

மாரவில துப்பாக்கிச் சூட்டில் பெண் உயிரிழப்பு!

July 23, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?