By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: பல்கலைக்கழக பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி நடவடிக்கை!
Share
Notification
Latest News
இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!
நெடுந்தீவு
தனுஷ்கோடியில் இலங்கையர் மூவர் அகதிகளாக தஞ்சம் !
இந்திய செய்தி
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !
இலங்கைச் செய்தி
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம்
மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > பல்கலைக்கழக பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி நடவடிக்கை!
இலங்கைச் செய்தி

பல்கலைக்கழக பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி நடவடிக்கை!

Last updated: 2023/06/12 at 3:50 PM
Published June 12, 2023 456 Views
Share
3 Min Read
SHARE

அன்று, இலங்கைப் பல்கலைக்கழகங்கள், ஆசியப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில் இருந்ததாக தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்தத் தரம் மற்றும் நற்பெயரை இந்நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பில் மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான நிலை உருவாக்கப்படுவதனூடாக வெளிநாட்டு மாணவர்களையும் இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு ஈர்க்க முடியும் எனவும் அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த (ஜூன் 9) பிற்பகல் இடம்பெற்ற “CVCD Excellence Awards” நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த நாட்டில் கல்வி முறையில் உள்ள பிரச்சினைகளை விரைவில் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை விளக்கிய ஜனாதிபதி, அனைவரும் சரியான வயதில் கல்வியை நிறைவுசெய்து முன்னேறிச் செல்லக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் – நம் நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 1,70,000 மாணவர்கள் உயர்கல்விக்குத் தகுதி பெறுகின்றனர். அவர்களில் சுமார் 40,000 பேர் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெறுகின்றனர். மேலும் 30,000 முதல் 40,000 பேர் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு செல்கிறார்கள். ஆனால் பல்கலைக்கழகங்களுக்குத் தகுதிபெறும் 40,000 பேருக்கு மேலதிகமாக மேலும் 25,000-30,000 பேரை இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவதற்கான பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகக் கட்டமைப்பு ஒன்று எம்மிடம் உள்ளது. அதேவேளை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு கீழ் உள்வாங்கப்படாத பல்கலைக்கழகங்களும் உள்ளன. மேலும், இலாபமீட்டும் மற்றும் இலாப நோக்கற்ற பல்கலைக்கழகக் கட்டமைப்பும் உள்ளது. எனவே, இந்த மூன்று முறைகளையும் நடைமுறைப்படுத்துவதா அல்லது ஒரு முறையை உருவாக்கி பல்கலைக்கழகக் கட்டமைப்பை மீட்டெடுப்பதா என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

அதேபோன்று, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசாங்கம் உதவித்தொகை வழங்குகிறது. மேலும் பல மாணவர்கள் வெளியே சென்று பணம் செலுத்தி உயர்கல்வி பெறுகின்றனர். மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தில் அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள சரத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.

இது வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு முறைகளில் செயல்படுத்தப்படுகிறது. சில நாடுகள் மாணவர்களுக்கு கடன் வழங்குகின்றன. இன்னும் சில நாடுகள் பொருளாதார நெருக்கடியில் உள்ள மாணவர்களுக்கு உதவிகளை வழங்குகின்றன. நாம் இது குறித்து ஆராய வேண்டும். அதிகபட்ச எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு கல்வியை வழங்கக்கூடிய வழிமுறைகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும். எம்மால் இந்தப் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியாது. ஏனெனில், ஒரு நாடாக முன்னேறிச் செல்லும்போது, பொறியாளர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்ட ஏராளமான நிபுணர்கள் நமக்குத் தேவைப்படுகின்றனர்.

மேலும், கல்வியின் தரநிலை மற்றும் தரம் குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும். அன்று, ஆசியப் பல்கலைக் கழகங்களின் பட்டியலில் நம் நாட்டுப் பல்கலைக் கழகங்கள் முதன்மை இடத்தில் இருந்தன. ஆனால் இன்று அந்த நிலை மாறிவிட்டது.

எமது பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளை மீண்டும் எவ்வாறு மேம்படுத்துவது என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நமது பல்கலைகழகங்களின் தரம் மற்றும் நற்பெயரை உலகிற்கு எவ்வாறு மீண்டும் உறுதிப்படுத்துவது என்பதை நாம் கண்டறிய வேண்டும். இதன் மூலம் உலகின் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களை நமது பல்கலைக்கழகங்களுக்கு ஈர்க்க முடியும். நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு இது நல்லதொரு நிலை என்றே கூற வேண்டும்.

உபவேந்தர்களைத் தாக்கி, கல்விக்கு இடையூறுகளை ஏற்படுத்துவதன் மூலம் தரமான பல்கலைக்கழகக் கட்டமைப்பைப் முன்னெடுக்க முடியாது. இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று நான் நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

Anarkali June 12, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article அதிரடி படையினரை தாக்கியவர் காரைநகரில் கைது!
Next Article விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபகரமாக உயிரிழப்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!
மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

You Might Also Like

இலங்கைச் செய்தி

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

June 28, 2025
இலங்கைச் செய்தி

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

June 28, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

June 27, 2025
இலங்கைச் செய்தி

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

June 26, 2025
இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?