தேசிய சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு நெடுந்தீவு பிரதேசசெயலக பிரிவில்இன்றைய தினம் (மே30) கரையோர பிரதேசத்தினை தூய்மையாக்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய சுற்றாடல் வார நிகழ்ச்சி திட்டத்தின் முதல் நாளான இன்று பிளாஸ்ரிக்கழிவு முகாமைத்துவ தினமாக ஒதுக்கப்பட்டு நெடுந்தீவு மணல் கடற்கரை பிரதேச கடற்கரையோர பகுதி சுத்தம் செய்யப்பட்டது.
இந் நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராமஉத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு செயற்திட்டத்தினை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.