நீதிபதி இடமாற்றம் குறித்து வட மாகாண ஆளுநர் செயலகம் விளக்கம்!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்திற்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் எந்தவொரு தொடர்பும் கிடையாது என வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

குறித்த நீதிபதியின் இடமாற்றப் பின்னணியில் வடக்கு மாகாண ஆளுநர் இருப்பதாகச் சமூக ஊடகங்களிலும் பல்வேறு தரப்பினராலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இது தொடர்பிலேயே வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் சமூகத்தில் எழக்கூடிய தேவையற்ற ஊகங்களைத் தவிர்க்கும் பொருட்டும், உண்மை நிலைமையைப் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையிலுமே ஆளுநர் செயலகம் இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article
Leave a comment