By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் பங்குபற்றிய விசேட செயலமர்வு – 05 ஆண்டுகளின் பின்!!
Share
Notification
Latest News
பாடசாலை நேர மாற்றம்: தினசரி இரண்டு இடைவேளைகள் வழங்க பரிந்துரை
இலங்கைச் செய்தி
அம்பாளின் ஆடிப்பூரம் இன்றாகும்!
இலங்கைச் செய்தி
நெடுந்தீவில் சாரதி அனுமதி பத்திர செயன்முறை பரீட்சை நாளை (ஜூலை29) !
நெடுந்தீவு
தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு
யாழ்ப்பாணம்
அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் பங்குபற்றிய விசேட செயலமர்வு – 05 ஆண்டுகளின் பின்!!
இலங்கைச் செய்தி

தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் பங்குபற்றிய விசேட செயலமர்வு – 05 ஆண்டுகளின் பின்!!

Last updated: 2024/09/29 at 2:26 AM
Published September 29, 2024 235 Views
Share
6 Min Read
SHARE

தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் பங்குபற்றிய விசேட செயலமர்வொன்றுநேற்றையதினம் (செப். 28) கொழும்பு ஆனந்தா கல்லூரியில் இடம்பெற்றது.

ஐந்து வருடங்களின் பின்னர், நாடளாவிய ரீதியில் உள்ள 396 தேசியபாடசாலைகளின் அதிபர்கள் இச்செயலமர்வில் கலந்துகொண்டனர்.

பாடசாலை நிதி முகாமைத்துவம், தேசிய பாடசாலைகளின் நிர்மாணப் பணிகள்மற்றும் புனரமைப்பு பணிகள், தேசிய பாடசாலைகள் மேற்பார்வையின் போதுஇனங்காணப்பட்ட பொதுவான விடயங்கள் உள்ளிட்ட தேசிய பாடசாலைக்கிளையினால் மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார். அரசியல்மயமயப்பட்டுள்ள கல்விமுறைமையை அதிலிருந்துவிடுவிக்க வேண்டும் என்று பிரதமர் இதன் போது கூறினார். இங்கு  மேலும்கருத்துத் தெரிவித்த பிரதமர்,

மறுமலர்ச்சி யுகம் – வளமான நாடு நம் அனைவருக்கும் அழகான வாழ்க்கை என்றஇந்த தொலைநோக்கை யதார்த்தமாக்குவதற்கு கல்வியின் முக்கியத்துவத்தைஇங்குள்ள அதிபர்கள் நன்கு அறிவார்கள். அரசாங்கம் என்ற வகையில்கல்விக்கான அனைத்து ஒத்துழைப்பையும் வழிகாட்டுதலையும் வழங்க நாம்தயாராக உள்ளோம். கல்வி என்பதன் மூலம்  நாம் எதிர்பார்ப்பது அறிவை மட்டும்வழங்குவதன்று.  அதையும் தாண்டிய ஒரு விரிந்த தொலைநோக்கு கல்வியில்உள்ளது. தொழிலுக்காக மட்டுமின்றி இந்த நாட்டைப் பொறுப்பேற்கக் கூடிய, இந்த நாட்டை மாற்றக்கூடிய, இந்த நாட்டை வழிநடத்தக் கூடியநல்லொழுக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன்எமது கல்விக் கொள்கையைத் தயாரித்துள்ளோம்.

ஒரு வளமான நாடு என்பதன் மூலம் எமது அரசாங்கம் நாடுவது பொருளாதாரஅடிப்படையில் மட்டும் வளமான நாடாக இருப்பதையல்ல. கலாசாரம், ஒழுக்கப்பெறுமானங்கள் மற்றும் மனப்பாங்குகளுடன் அனைத்து அம்சங்களிலும் நாம்வளம்பெற வேண்டும் என்பதாகும். இத்தகைய சமூகத்தில் நாம் அனைவரும்அழகான வாழ்க்கையை வாழ முடியும். நாம் மறுமலர்ச்சி யுகம் என்று கூறுவது  இந்த நாட்டிற்கு ஒரு புதிய ஆரம்பம் தேவை என்பதாகும். ஐக்கியம், நல்லிணக்கம்மற்றும் நவீன உலகில் பெருமையுடன் முன்னோக்கிச் செல்லக்கூடியபிரஜைகளை நாம் உருவாக்க வேண்டும்.  நாம் முன்மொழிந்துள்ள  கல்விக்கொள்கை இந்த அபிலாஷைகளை அடைவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

தற்போது சமூகத்தில் கல்வியின் மீது நம்பிக்கை இல்லை. கல்வியின் மீதானநம்பிக்கையை கட்டியெழுப்புவது மிகவும் முக்கியமானது. விரக்தியான நிலையேகாணப்படுகிறது. தற்போதுள்ள கல்வி முறையில் பிள்ளைகள், பெற்றோர்கள், மற்றும் சமூகம் திருப்தி அடைகின்றனரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. திட்டமிட்டபடி பரீட்சையை நடத்த முடியுமா? பரீட்சை பெறுபேறுகள் பற்றிநீங்கள் நம்பிக்கையோடு இருக்க முடியுமா? கல்வித் துறையில் நியமனங்கள்மற்றும் இடமாற்றங்கள் குறித்து நீங்கள் நம்பிக்கையுடன் இருக்க முடியுமா? பிள்ளைகளை பாடசாலையில் சேர்க்கும் முறையில் சமுதாயம் நம்பிக்கை வைக்கமுடியுமா? நம்பிக்கையை இழக்கும் வகையில் இந்த செயல்முறை மற்றும்முறைமை பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. இது அரசியலாகிவிட்டது.

இங்கு இந்த கல்வி முறைமையில் பணியாற்றும் உங்களிடம் தவறில்லை. காலாகாலமாக கல்வியில் கவனம் செலுத்தாமை, கல்வியின் முக்கியத்துவம், ஒருநாட்டின் வளர்ச்சியில் கல்வியே அடிப்படைப் பங்காற்ற வேண்டும் என்றபொறுப்பில் இருந்து படிப்படியாக அரசு விலகியதால் இந்த நெருக்கடிஏற்பட்டுள்ளது. கல்வி அரசியல்மயமாகி உள்ள காரணத்தினால் இத்துறையில்உள்ள அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். உங்கள்தொழில்முறை கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் கல்வி முறையைகட்டியெழுப்ப நாம் விரும்புகிறோம். உங்களது பொறுப்பை சுதந்திரமாகநிறைவேற்றத் தேவையான சூழலை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.

ஒவ்வொரு அரசாங்கமும் கல்வி சீர்திருத்தங்கள் பற்றி பேசின. அந்தசீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியதன் மூலமே கல்வி முறை மிகவும்சிக்கலான நிலைமையை அடைந்துள்ளது. கல்வி முறையின் வீழ்ச்சிக்குமற்றொரு காரணம், ஒழுங்குபடுத்தல் ஒரே இடத்தில்  இல்லாதிருப்பதாகும். கல்விஅமைச்சு ஒன்றை கூறுகிறது. கல்வி ஆணைக்குழு இன்னொன்றை கூறுகிறது.

சில நேரங்களில் ஜனாதிபதி அலுவலகம் மேலும் ஒன்றை கூறுகிறது. எந்தக்கொள்கைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும், எந்தக் கொள்கையைநடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தெளிவின்மை கடந்த பல  ஆண்டுகளாகஇருந்து வருகிறது. அந்த தெளிவற்ற நிலையின்றி நாம் அனைவரும்ஏற்றுக்கொள்ளக் கூடிய கூட்டாகச் செயல்படுத்தக்கூடிய ஒரு கொள்கையைநாங்கள் நடைமுறைப்படுத்த விரும்புகிறோம்.

எங்கள் அரசியல் இயக்கம் கலந்துரையாடல்களுக்கு எப்போதும் தயாரகவுள்ளது. உங்கள் கருத்துகளுக்கு மதிப்பளிக்கத் தயாராகவுள்ளது. இந்த நாட்டில் நிலவும்நெருக்கடிகளுக்கு விரைவான தீர்வுகளைத் தேடும் அதே வேளையில் சிறந்தகல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த விரும்புகிறோம். மீண்டும்நெருக்கடிக்குள் செல்லாமல் இந்த நாட்டை உலகில் அங்கீகரிக்கப்பட்ட நாடாகமாற்றும் கல்வி முறையை தயார் செய்ய வேண்டும். நாட்டிற்குத் தேவையானமதிப்புமிக்க பிரஜைகள் கல்வி முறையின் மூலமே உருவாக்கப்படுகின்றனர். அரசாங்கம் என்ற வகையில், கல்வியில் அதிக கவனம் செலுத்துகிறோம். இது ஒருஎண்ணக்கரு மட்டுமல்ல, அதற்குத் தேவையான நிதிப் பங்களிப்பையும் எமதுஅரசாங்கம் வழங்கும். அதற்கு நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். மொத்த தேசியஉற்பத்தியில் 6% கல்விக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்று எமது கொள்கைத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதார நெருக்கடியின் போது இதை ஒரேயடியாகசெயற்படுத்துவது கடினம் என்றாலும், அந்த இலக்கை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம். எமது வரவுசெலவுத் திட்டத்தில் கல்விக்கு விசேட கவனம்செலுத்தப்படும்.

குடும்பத்தின் பொருளாதார நிலை பிள்ளைகள் தரமான கல்வியைப் பெறுவதற்குதடையாக இருக்கக்கூடாது. பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள்செலவிடும் தொகை மேலும் மேலும் அதிகரித்துள்ளது. இலவசக் கல்வி உள்ளநாட்டில் இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இலவசக் கல்வி இருந்தாலும், கல்விக்காக பெற்றோர்கள் அதிக பணம் செலவழிக்க வேண்டியுள்ளது. இலவசக்கல்வி மூலம் நாம் எதிர்பார்த்த முக்கிய விடயம் நடக்கவில்லை. அதாவது, பிள்ளைகளின் கல்விக்கு தமது வருமானம் ஒரு காரணியாக இருக்கக் கூடாதுஎன்ற உண்மை இல்லாமல் போய்விட்டது. இலவசக் கல்வி மூலம் இந்த நாட்டில்ஆயிரக்கணக்கான புத்திஜீவிகள் உருவானார்கள். இதனால் பலர் உலகின் மிகஉயர்ந்த இடங்களை அடைய முடிந்தது. ஆனால் மீண்டும், தரமான கல்வியைப்பெறுவதற்கு பணம் ஒரு காரணியாக மாறியுள்ளது. எனவே பாடசாலைகளுக்குஇடையே உள்ள வேறுபாடுகளை மாற்ற வேண்டும். பிள்ளைகளின் கல்விக்காகசெலவிடப்படும் பணத்தின் பெரும் சுமையிலிருந்து பெற்றோர்கள் விடுவிக்கப்படவேண்டும்..

பிள்ளை கல்விக்காக பாடசாலைக்கு அனுப்பப்பட்டவுடன், பெற்றோர்களின்சுமை குறைக்கப்பட வேண்டும். அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.  இந்தஇலக்குகளுக்கு பங்களிக்கும் கல்வி நிர்வாகம், அதிபர்கள் மற்றும்ஆசிரியர்களுக்கு வசதிகள் மற்றும் தேவையான பயிற்சிகளை வழங்குவதில்விசேட கவனம் செலுத்தப்படும். உலகின் தலைசிறந்த கல்விக் கட்டமைப்புஇங்கு அறிமுகப்படுத்தப்பட்டாலும், அது உங்கள் மூலமே செயற்படுத்தப்படவேண்டும். அதனை நிறைவேற்றுவதற்கு முடியாத தடைகளை நீக்குவது எங்களின்முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும். இது ஒரு கூட்டுப் பயணம். ஒரு கட்சியோ, ஒரு அரசாங்கமோ மட்டும் அதை செய்ய முடியாது. அதற்கு உங்கள் ஆதரவைஎதிர்பார்க்கிறேன்.

இந்த நிகழ்வில் கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர்திலகா ஜயசுந்தர, தேசிய பாடசாலை பணிப்பாளர் திருமதி ஹசினி தலகலஉட்பட கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

You Might Also Like

பாடசாலை நேர மாற்றம்: தினசரி இரண்டு இடைவேளைகள் வழங்க பரிந்துரை

அம்பாளின் ஆடிப்பூரம் இன்றாகும்!

பதிவுச் சான்றிதழ் எந்த காலத்திற்கும் செல்லுபடியாகும் – புதிதாக எடுக்கவேண்டிய அவசியமில்லை !!

சர்வதேச விமான நிலையங்களில் பனைவள பொருட்கள் காட்சிக்கு நடவடிக்கை – அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு

வங்கி அட்டை பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டண வசூலிப்பு இல்லை !

40 நாடுகளுக்கு இலவச விசா வழங்க திட்டம் – அதனால் 66 மில்லியன் வருமான இழப்பு!!

சிறீதரன் எம்பி தொடர்பில் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு – அவர் மறுப்பு!!

நாட்டில் பொது மக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியே!- சரத் வீரசேகர

SUB EDITOR September 29, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகின – 2023(2024)
Next Article விளையாட்டு அமைச்சுக்கு பிரதமரின் பணிப்புரை!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

பாடசாலை நேர மாற்றம்: தினசரி இரண்டு இடைவேளைகள் வழங்க பரிந்துரை
அம்பாளின் ஆடிப்பூரம் இன்றாகும்!
நெடுந்தீவில் சாரதி அனுமதி பத்திர செயன்முறை பரீட்சை நாளை (ஜூலை29) !
தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு

You Might Also Like

இலங்கைச் செய்தி

பாடசாலை நேர மாற்றம்: தினசரி இரண்டு இடைவேளைகள் வழங்க பரிந்துரை

July 28, 2025
இலங்கைச் செய்தி

அம்பாளின் ஆடிப்பூரம் இன்றாகும்!

July 28, 2025
இலங்கைச் செய்தி

பதிவுச் சான்றிதழ் எந்த காலத்திற்கும் செல்லுபடியாகும் – புதிதாக எடுக்கவேண்டிய அவசியமில்லை !!

July 27, 2025
இலங்கைச் செய்தி

சர்வதேச விமான நிலையங்களில் பனைவள பொருட்கள் காட்சிக்கு நடவடிக்கை – அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு

July 26, 2025
இலங்கைச் செய்தி

வங்கி அட்டை பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டண வசூலிப்பு இல்லை !

July 26, 2025
இலங்கைச் செய்தி

40 நாடுகளுக்கு இலவச விசா வழங்க திட்டம் – அதனால் 66 மில்லியன் வருமான இழப்பு!!

July 26, 2025
இலங்கைச் செய்தி

சிறீதரன் எம்பி தொடர்பில் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு – அவர் மறுப்பு!!

July 26, 2025
இலங்கைச் செய்தி

நாட்டில் பொது மக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியே!- சரத் வீரசேகர

July 25, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?