By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஜுலைக்குள் தீர்வு! – தமிழரசுக்கட்சிப் பிரதிநிதிகளிடம் ரணில் உறுதி!
Share
Notification
Latest News
இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!
நெடுந்தீவு
தனுஷ்கோடியில் இலங்கையர் மூவர் அகதிகளாக தஞ்சம் !
இந்திய செய்தி
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !
இலங்கைச் செய்தி
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம்
மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஜுலைக்குள் தீர்வு! – தமிழரசுக்கட்சிப் பிரதிநிதிகளிடம் ரணில் உறுதி!
இலங்கைச் செய்தி

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஜுலைக்குள் தீர்வு! – தமிழரசுக்கட்சிப் பிரதிநிதிகளிடம் ரணில் உறுதி!

Last updated: 2023/06/11 at 10:12 PM
Published June 11, 2023 377 Views
Share
2 Min Read
SHARE

தமிழ்மக்களின் அடிப்படைப்பிரச்சினைகள் மற்றும் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நிலைப்பாட்டில் எத்தகைய மாற்றமும் இல்லை என்றும், எதிர்வரும் ஜுலை மாதத்துக்குள் இவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வுகாண்பதற்கு முயற்சிப்பதாகவும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக்கட்சி உறுப்பினர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தரப்புக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதியுடனான தொடர் பேச்சுவார்த்தைகள் மற்றும் இழுத்தடிக்கப்படும் தீர்வு என்பன குறித்து எடுத்துரைக்கும் நோக்கில் தமிழரசுக்கட்சியினால் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கைக்கு அமைவாகவே இச்சந்திப்பு நடைபெற்றது.

இச்சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தரப்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதி அலுவலகப்பிரதானியும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, சட்டமா அதிபர், தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர். அதேவேளை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக்கட்சித்தரப்பில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், சாணக்கியன் மற்றும் கலையரசன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது அரசாங்கம் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றபோதிலும், தமிழ்மக்கள் எதிர்பார்க்கின்ற தீர்வை வழங்காமல் தொடர்ச்சியாக இழுத்தடிப்புச்செய்துவருவது குறித்து ஜனாதிபதியிடம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய சம்பந்தன், இந்த நிலை தொடரும் பட்சத்தில் தாம் தீர்க்கமானதொரு முடிவை எடுக்கவேண்டியேற்படும் என்றும் எச்சரித்தார்.

அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி தனக்கு எதிர்வரும் ஜுலை மாதம் வரை கால அவகாசம் வழங்குமாறும், அதற்குள் அதிகாரப்பகிர்வு, காணி விடுவிப்பு, அரசியல்கைதிகள் விவகாரம் என்பன உள்ளடங்கலாகத் தமிழ்மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வொன்றை எட்ட முயற்சிப்பதாகக் குறிப்பிட்டார்.

அதனை முற்றாக மறுக்காதபோதிலும், மீண்டும் தமது அதிருப்தியை வெளிப்படுத்திய சம்பந்தன், இவ்வாறு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருப்பதால் எவ்வித பயனுமில்லை என்றும், இவற்றால் தாம் ஏமாற்றமடைந்திருப்பதாகவும் தெரிவித்ததுடன், இவ்வாறானதொரு பின்னணியில் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமை சார்ந்த தீர்மானமொன்றை எடுக்கவேண்டிய நிலையேற்படும் என்று கூறினார்.

அதனைத்தொடர்ந்து தொல்பொருள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்புக்கள் குறித்து பேசப்பட்டபோது, அங்கிருந்த தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் கடுந்தொனியில் பேசிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கிளிநொச்சி, தையிட்டி, மயிலிட்டி ஆகிய பகுதிகளில் நிலவும் காணிப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

மேலும் இதன்போது மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடத்தவேண்டுமென தமிழரசுக்கட்சி உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டது. இருப்பினும் தேர்தல் செயன்முறையில் காணப்படும் சட்டரீதியான சிக்கல்களைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவற்றை நிவர்த்தி செய்ததன் பின்னர் தேர்தலை நடத்தமுடியும் என்று குறிப்பிட்டதுடன் மாகாணசபைகளுக்கு கல்விசார் அதிகாரங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளைக் கொண்டுவருவது பற்றியும் பிரஸ்தாபித்தார்.

அதேபோன்று உண்மையைக் கண்டறியும் பொறிமுறை தொடர்பில் அரசாங்கத்தரப்பினரால் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இருப்பினும் கடந்தகால உள்ளகப்பொறிமுறைகள் மற்றும் ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், இந்த உண்மையைக் கண்டறியும் பொறிமுறையிலும் பெருமளவுக்கு நம்பிக்கைவைக்கமுடியாமல் இருப்பதாகக் குறிப்பிட்ட தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள், இதுகுறித்து விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருப்பதாகத் தெரிவித்தனர்.

You Might Also Like

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

Anarkali June 11, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article 2 ஆம் சங்கிலிய மன்னனின் 404 ஆவது நினைவு தினம் இன்று!
Next Article சிம்பாப்வே சென்ற இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் பரிதாப நிலை!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!
மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

You Might Also Like

இலங்கைச் செய்தி

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

June 28, 2025
இலங்கைச் செய்தி

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

June 28, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

June 27, 2025
இலங்கைச் செய்தி

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

June 26, 2025
இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?