ரூபாயின் பெறுமதி இன்று (29.05) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 324.45 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன் அதன் விற்பனை பெறுமதி 334.24 ரூபாயாக காணப்படுகின்றது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 434.70 ஆகவும் விற்பனைப் பெறுமதி 450.24 ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376.50 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன் அதன் விற்பனை பெறுமதி 390.50 ரூபாயாக பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 233.94 ஆகவும் விற்பனைப் பெறுமதி 243.57 ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 229.75 ஆகவும் விற்பனைப் பெறுமதி 241.35 ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 252.30 ஆகவும் விற்பனைப் பெறுமதி 263.47 ஆகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை கடந்த 27 ஆம் திகதி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 320.40 ரூபாயாகவும், விற்பனை பெறுமதி 330.81 ரூபாயாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.