வேலணை துறையூர் சர்வசக்தி அறநெறி பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பூமணி அம்மா அறக்கட்டளையின் தலைவரும், சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ் – இலங்கை பணிப்பாளருமான திரு விசுவாசம்செல்வராசாவின் நிதிப் பங்களிப்பில் இவை வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் வேலணை துறையூர் ஐயனார் கலாமன்றம் தலைவர் ,சர்வசக்தி அறநெறி பாடசாலையின் பொறுப்பாசிரியர், ஆசிரியர், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.