கடந்த காலங்களில் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில், விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான ஒரு தொகை ஆயுதங்கள் நாட்டிற்குகொண்டு வரப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நேற்று (ஜூன் 05) நாடாளுமன்றத்தில் தெரிவித்ததை பாதுகாப்பு அமைச்சுநிராகரித்துள்ளது.
அர்ச்சுனாவின் கருத்து அடிப்படையற்றது, தவறானது என பாதுகாப்பு செயலாளர்ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.
”அண்மையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய 300 கொள்கலன்களில் இருந்த பொருட்கள் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குசொந்தமானவை. அந்தக் கொள்கலன்களில் ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களேஇருந்துள்ளன.
2009க்கு முன்னர் நாட்டுக்கு கொண்டு வருவதற்கு முயற்சித்த பொருட்கள்தாய்லாந்தில் இருந்ததாகவும், அவையே தற்போது நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும்” இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்திருந்தார்.
இவ்வாறு நாடாளுமன்றத்தில் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன்அர்ச்சுனா வெளியிட்ட கருத்துக்கள் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமைகுறிப்பிடத்தக்கது.