By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாட்டு கலந்துரையாடல் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
யாழ்ப்பாணம்
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
யாழ்ப்பாணம்
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!
தீவகச் செய்தி
வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணிக்கு ஏறியது கொடி!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாட்டு கலந்துரையாடல் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
நெடுந்தீவு

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாட்டு கலந்துரையாடல் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

Last updated: 2025/02/07 at 9:11 PM
Published February 7, 2025 173 Views
Share
2 Min Read
SHARE

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாட்டு கலந்துரையாடல் இன்று (பெப் 07) காலை 09.30 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் தலைமையில், மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கலந்துரையாடலில் தலைமை உரையாற்றிய அரசாங்க அதிபர், கடந்த ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெற்றதற்காக கடற்படை மற்றும் தொடர்புடைய திணைக்களங்கள் வழங்கிய உறுதுணைக்கு நன்றியை தெரிவித்தார். மேலும், எதிர்வரும் மார்ச் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழாவுக்கான கடற்படையின் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, விழா சிறப்பாக நடைபெற அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என கேட்டுக்கொண்டார்.

இந்த கலந்துரையாடலில், இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை, தங்குமிட வசதிகள், கூடாரங்கள், உணவு, பாதுகாப்பு, சுகாதார வசதிகள், மலசலகூடங்கள், குடிநீர், ஒளி-ஒலி வசதிகள், கடல் மற்றும் தரைப்போக்குவரத்து ஏற்பாடுகள், தனியார் கடற்போக்குவரத்து படகுகளின் கட்டண நிர்ணயம், கழிவு முகாமைத்துவம் உள்ளிட்ட விடயங்கள் விரிவாக பேசப்பட்டன.

கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

  1. பக்தர்கள் எண்ணிக்கை:
    • இலங்கையில் இருந்து 4,000 யாத்திரிகர்களும், இந்தியாவில் இருந்து 4,000 யாத்திரிகர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • அதிகாரிகள் மற்றும் பிற உறுப்பினர்களை சேர்த்து மொத்தமாக 9,000 பேர் பங்கேற்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
  2. படகு போக்குவரத்து கட்டணங்கள்:
    • குறிகட்டுவானிலிருந்து கச்சதீவுக்கு ஒரு வழிக்கட்டணம் ரூ.1300.00.
    • நெடுந்தீவிலிருந்து கச்சதீவுக்கு ஒரு வழிக்கட்டணம் ரூ.1000.00.
    • படகு சேவையில் ஈடுபடும் படகுகளுக்கான தேவையான அனுமதிப் பத்திரங்களை கடற்படையினரிடமிருந்து பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
  3. பேரூந்து சேவை:
    • இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் போக்குவரத்து துறையின் பேரூந்துகள் பயன்படுத்தப்படும்.
    • மார்ச் 14 ஆம் தேதி காலை 4.00 மணி முதல் 11.30 வரை யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேரூந்து சேவை இயக்கப்படும்.
  4. உணவுதானம்:
    • யாத்திரிகர்களுக்கு மார்ச் 14 ஆம் தேதி இரவு உணவும், மார்ச் 15 ஆம் தேதி காலை உணவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில், யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் ஆயர் அருட்தந்தை P.J. ஜெபரட்ணம், அருட்தந்தை பி. பத்திநாதர், இந்திய துணைத் தூதுவர் திரு இ. நாகராஜன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), வட மாகாணப் பிரதி கடற்படை கட்டளைத் தளபதி, பிரதிப் பொலிஸ்மா அதிபர், 512வது பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி, திணைக்களத் தலைவர்கள், யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் (நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை), கடற்படை மற்றும் இராணுவ அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள், துறைசார் திணைக்களங்களின் பிரதிநிதிகள், நெடுந்தீவு இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You Might Also Like

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

SUB EDITOR February 7, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article ‘GovPay’ வசதி இன்று முதல் செயல்பாட்டில் வருகிறது.
Next Article கச்சதீவு திருவிழாவுக்கு இம்முறை 9000 பேர் பங்கேற்கலாம்!!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

June 24, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025
நெடுந்தீவு

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

June 23, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?