By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: இலங்கைச் சட்டங்களால் கடும் அதிருப்தியடைந்த ஐ.நா. மீளாய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்து!
Share
Notification
Latest News
செம்மணியில் மண் மாதிரிகள் பகுப்பாய்வு!
யாழ்ப்பாணம்
நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!
நெடுந்தீவு
க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!
இலங்கைச் செய்தி
போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!
இலங்கைச் செய்தி
செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > இலங்கைச் சட்டங்களால் கடும் அதிருப்தியடைந்த ஐ.நா. மீளாய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்து!
இலங்கைச் செய்தி

இலங்கைச் சட்டங்களால் கடும் அதிருப்தியடைந்த ஐ.நா. மீளாய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்து!

Last updated: 2023/10/14 at 9:56 PM
Published October 14, 2023 321 Views
Share
1 Min Read
SHARE

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவையும், நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட வரைவையும் மீளாய்வு செய்ய வேண்டும் என்று ஐ.நா.மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியுள்ளது. இந்த இரு சட்ட வரைபுகளும் அதிகாரத் தரப்பினருக்கு அளவுக்கதிகமான அதிகாரங்களை வழங்குவதுடன் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மீறுவதாகவும் அமைந்துள்ளன என்று ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நீக்கும்படி ஐ.நா.மனித உரிமைகள் பேரவை நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அதற்குப் பதிலீடாக அரசாங்கத்தால் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கொண்டு வரப்படுகிறது.

இந்த சட்டம் கருத்துச் சுதந்திரம், ஒன்று கூடும் சுதந்திரம் என்பவற்றைப் பாதுகாக்க தவறியுள்ளது. பயங்கரவாதம் என்ற வரைவிலக்கணத்தின் கீழ் பொலிஸாருக்கும், இராணுவத்தினருக்கும் கட்டுப்பாடற்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கைதுகள், தடுத்து வைத்தல், விசாரணை போன்ற விடயங்களில் நீதித் துறையினரின் கண்காணிப்புப் போதுமானதாக இல்லை. ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தல், தடை செய்யப்பட்ட பிரதேசங்களாக பிரகடனம் செய்தல் போன்ற விடயங்களில் நிறைவேற்று அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்நிலை பாதுகாப்புச்சட்டத்தை எடுத்துக்கொண்டால் இந்த சட்ட வரைபு பொதுமக்களின் தொடர்பாடலை கட்டுப்படுத்துவதுடன் அதிகார தரப்பினர் தங்களுக்கு பிடிக்காத விடயங்களை போலியானவை எனக்கூறி கைது செய்வதற்கும் சந்தர்ப்பம் அளிக்கிறது. அதிலுள்ள சரத்துகள் அதிகார தரப்பினர் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதற்கும் தாங்கள் செய்வது எல்லாம் சட்டப்படிதான் செய்கிறோம் என கூறுவதற்கும் வழி வகுப்பதுடன் கருத்துச் சுதந்திரத்தின் மீதும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஐ.நா. நிபுணர்களுடனும், சிவில் சமூகத்தினருடனும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொண்டு உரிய திருத்தங்களைச் செய்து சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு அமைவாக புதிய சட்ட வரைவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐ.நா.மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

You Might Also Like

க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!

போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

Anarkali October 14, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article மிருசுவில் படுகொலையாளிக்கு கோத்தா வழங்கிய மன்னிப்பு!- மறுபரிசீலனை மனு ஏற்பு!
Next Article கிளிநொச்சியில் இடம்பெற்ற பசுபதிப்பிள்ளையின் முதலாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் மண் மாதிரிகள் பகுப்பாய்வு!
நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!
க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!
போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!

You Might Also Like

இலங்கைச் செய்தி

க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!

June 29, 2025
இலங்கைச் செய்தி

போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!

June 29, 2025
இலங்கைச் செய்தி

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

June 28, 2025
இலங்கைச் செய்தி

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

June 28, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

June 27, 2025
இலங்கைச் செய்தி

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

June 26, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?