By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: அயலவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும் என நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கு அரசுத்தலைவர் அறிவுரை வழங்கினார்!
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
யாழ்ப்பாணம்
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
யாழ்ப்பாணம்
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!
தீவகச் செய்தி
வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணிக்கு ஏறியது கொடி!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > அயலவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும் என நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கு அரசுத்தலைவர் அறிவுரை வழங்கினார்!
யாழ்ப்பாணம்

அயலவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும் என நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கு அரசுத்தலைவர் அறிவுரை வழங்கினார்!

Last updated: 2025/02/07 at 3:47 PM
Published February 7, 2025 185 Views
Share
1 Min Read
SHARE

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் திண்மக் கழிவு அகற்றல், வளிமாசு கட்டுப்பாடு, பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஒலிபெருக்கி பயன்பாடு போன்ற விடயங்கள் தொடர்பாக கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

நேற்று (பெப் 06) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இதனை அடுத்து இன்று (பெப் 07) மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, அவர் கூறியதாவது:

ஆலயங்கள் மற்றும் பிற நிகழ்வுகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் அசௌகரியங்கள் குறித்து தொடர்ந்து முறைப்பாடுகள் வந்துகொண்டிருக்கின்றன. சமய நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளை பயன்படுத்தும்போது, அருகிலுள்ள பொதுமக்கள், மாணவர்கள், மற்றும் முதியவர்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு கவனிக்க வேண்டும்.

மேலும், சில இடங்களில் ஆலயங்களிலிருந்து வெகுதூரம் உள்ள பகுதிகளில் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு அதிக ஒலி எழுப்பப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படாமல் செயல்படுமாறு ஆலய நிர்வாகத்தினரையும் தர்மகர்த்தாக்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

இது குறிப்பாக இரவு நேரங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அதிக பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. எனவே, இதனை கட்டுப்படுத்த நாம் சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம்.

ஒலிபெருக்கிகளுக்கான decibel அளவை கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகள் மற்றும் சட்டங்கள் உள்ளன. இதை அமல்படுத்துவதற்கான அதிகாரம் பொலிஸாருக்கு உள்ளது. எனவே, பொலிஸாருக்கு இது குறித்து எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளோம்.

பொதுமக்கள், அசௌகரியங்கள் ஏற்பட்டால், தங்களது முறைப்பாடுகளை பிரதேச செயலகத்திற்கு தெரிவிக்கலாம். இதன் மூலம், பிரதேச செயலர்கள் அவற்றை உடனடியாக பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்து, தேவையான கட்டுப்பாடுகளை மேற்கொள்வார்கள்.

எனவே, ஒலிபெருக்கிகள் பயன்பாட்டால் பிறருக்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இது அனைவருக்கும் ஏற்ற ஒரு சூழல் உருவாக்க உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

You Might Also Like

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

SUB EDITOR February 7, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நெடுந்தீவில் நவரத்தினசிங்கம் அவர்களின் 117 ஆவது ஜனன தின நிகழ்வு!!
Next Article ‘GovPay’ வசதி இன்று முதல் செயல்பாட்டில் வருகிறது.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!

You Might Also Like

யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

June 26, 2025
யாழ்ப்பாணம்

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

June 26, 2025
யாழ்ப்பாணம்

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

June 26, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

June 25, 2025
யாழ்ப்பாணம்

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

June 25, 2025
யாழ்ப்பாணம்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

June 25, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

June 24, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

June 23, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?