By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: அதிகாரிகளின் அசமந்தப் போக்கால் மீண்டும் சேவையில் ஈடுபட முடியாத நிலையில் குமுதினி
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வன்னிச் செய்திகள்
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
தீவகச் செய்தி
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
நெடுந்தீவு
ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !
உலகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > அதிகாரிகளின் அசமந்தப் போக்கால் மீண்டும் சேவையில் ஈடுபட முடியாத நிலையில் குமுதினி
நெடுந்தீவு

அதிகாரிகளின் அசமந்தப் போக்கால் மீண்டும் சேவையில் ஈடுபட முடியாத நிலையில் குமுதினி

Last updated: 2023/03/12 at 3:16 PM
Published March 12, 2023 414 Views
Share
2 Min Read
SHARE

நெடுந்தீவு குறிகட்டுவான் இடையிலான போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான குமுதினி படகைத் திருத்தும் பணிகள் வல்வெட்டித்துறையில் ரேவடி படகு கட்டும் துறையில் ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தின்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட வேலைகளில் 80 வீதமான வேலைகள் முடிவு தற்போது முடிவுற்றுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஆயினும் 1.63 மில்லியன் ரூபா ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத் தொகையின் அடிப்படையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், அந்த நிதியில் 25 வீத நிதி கூட இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்றும், பெரும் நிதிச் செலவுடைய வேலை திட்டம் என்பதால் கோரப்பட்ட முற்பணமும் இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்றும் படகு கட்டுமான ஒப்பந்தகாரர் கவலையுடன் தெரிவித்தார்.

WhatsApp Image 2023-03-11 at 11.31.00 PM (5)
WhatsApp Image 2023-03-11 at 11.31.00 PM (6)
WhatsApp Image 2023-03-11 at 11.31.00 PM (3)

நிதி விடுவிக்கப்படாமல் உள்ளதால் தொடர்ந்து வேலைகளை தொடர்ந்து மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றும், புலம்பெயர் தேசத்தில் உள்ள நெடுந்தீவைச் சேர்ந்த சிலரது நம்பிக்கை வார்த்தைகளின் அடிப்படையில் இவ்வளவு வேலைகளும் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

வேலையைக் கையளிக்கும் போது ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் சில பொருள்களையும் உதவி பணியாளர்களையும் தருவோம் என்று கூறியிருந்தனர். ஆனால் இதுவரை அது நடக்கவில்லை என்று தெரிவித்த ஒப்பந்தகாரர், புலம்பெயர் உறவுகளின் கோரிக்கைக்கு அமைய குறைந்த அளவு பணியாளர்களை ஈடுபடுத்தி வேலைகள் முன்னகர்த்தப்படுகின்றன என்றும் கூறினார்.

குமுதினிப் படகு சரியான பராமரிப்பு இன்மையாலேயே பாதிப்புக்குள்ளாகியுள்ளது. படகில் உள்ள பாகங்கள் அனைத்தும் பெறுமதியானவையும் தரமானவையும் அவற்றை சிறப்புற பராமரித்தால் நீண்டகால பயனைப் பெறலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

படகின் அடிப்பகுதிக்கான செப்பு தகடுகள் பொருத்துவதற்குரிய செப்பு ஆணிகளை இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதால் அவற்றை நெருக்கமானவர்கள் இந்தியா சென்று வரும்போது பகுதி பகுதியாக கொள்வனவு செய்து பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

WhatsApp Image 2023-03-11 at 11.31.00 PM (2)
WhatsApp Image 2023-03-11 at 11.31.00 PM (1)
WhatsApp Image 2023-03-11 at 11.31.00 PM

செய்து முடிக்கப்பட்ட வேலைகளுக்கான நிதி விடுவிக்கப்படுமாயின் நிதி கிடைக்கின்ற நாளில் இருந்து 15 தினங்களில் பயணிகள் பாவனைக்காக படகினை வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது விடயமாக பொறுப்பான அதிகாரிகளும் நெடுந்தீவு மக்கள் மீது அக்கறை கொண்ட அரசியல்வாதிகளும் தனி அக்கறை எடுத்து செயற்பட்டுப் படகை விரைவில் சேவையில் ஈடுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெடுந்தீவு மக்கள் நலனைக் கருத்தில் எடுத்து குமுதினி படகின் திருத்த வேலைகளை செய்து முடிக்க சகலரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

You Might Also Like

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

Anarkali March 12, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article மாதகலில் களைகட்டும் முரல் மீன் திருவிழா!
Next Article அனலைதீவில் இலவச கட்புரை பரிசோதனை முகாம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

June 24, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025
நெடுந்தீவு

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

June 23, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?