By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: அதிகபட்ச அதிகாரத்தைப் பகிர்வதற்கு எதிர்பார்ப்பு! – கொள்கை விளக்க உரையில் ரணில் தெரிவிப்பு!
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
யாழ்ப்பாணம்
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
யாழ்ப்பாணம்
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!
தீவகச் செய்தி
வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணிக்கு ஏறியது கொடி!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > அதிகபட்ச அதிகாரத்தைப் பகிர்வதற்கு எதிர்பார்ப்பு! – கொள்கை விளக்க உரையில் ரணில் தெரிவிப்பு!
இலங்கைச் செய்தி

அதிகபட்ச அதிகாரத்தைப் பகிர்வதற்கு எதிர்பார்ப்பு! – கொள்கை விளக்க உரையில் ரணில் தெரிவிப்பு!

Last updated: 2023/02/09 at 6:56 AM
Published February 8, 2023 290 Views
Share
2 Min Read
SHARE

ஒற்றையாட்சிக்குள் உச்சபட்சமாக அதிகாரத்தைப் பகிர்வதற்கு எதிர்பார்த்துள்ளேன் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளர்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை இன்று (பெப்ரவரி 8) ஆரம்பித்து கொள்கை பிரகடன உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்தினால் 2026ஆம் ஆண்டில் நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்க முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வரிக் கொள்ளையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் வரி அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் தேவை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தாம் விருப்பத்துடன் இந்த வரிகளை விதிக்கவில்லை எனவும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு விருப்பமின்றியேனும் சரியானதைச் செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன்போது கூறினார்.

உழைக்கும் போதே செலுத்தும் வரியை நீக்கினால் நாடு 100 பில்லியன் ரூபாவை இழக்கும் எனவும் வரி எல்லையை 2 இலட்சம் வரை அதிகரித்தால் நாடு 63 பில்லியன் ரூபாவை இழக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

163 பில்லியன் ரூபா தொகையை இழக்கும் நிலையில் தற்போது நாடு இல்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பல்வேறு நாடுகள் இவ்வாறு வரி அதிகரிப்பை மேற்கொண்டுள்ளன. இந்த வரி முரண்பாட்டை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால் ஒட்டுமொத்த மக்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ள வரிச்சுமை குறைவடையும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியில் பணவீக்கம் உயர்வடைந்து, பொருள்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், இன்னும் ஐந்து, ஆறு மாத குறுகிய காலத்திற்கு இந்தக் கஷ்டத்தை தாங்கிக்கொள்ள முடியுமாயின், தீர்வை நோக்கி செல்ல முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

காணிப் பிரச்சிணைக்கு உரிய தீர்வு காணப்பட்டு வர்த்தமானி ஊடாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேசிய காணி சபை ஒன்றை ஸ்தாபிப்பதற்கான வரைவு தயாரிக்கப்படுவதோடு, தேசிய காணிக்கொள்கை வரைவு தயாரிக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

காணாமல் போன நபர்கள் தொடர்பாக கண்டறிவதற்கான முறைமையினை துரிதப்படுத்த உள்ளது என்றும், பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பெயரில் சிறை வைக்கப்பட்டுள்ள நபர்கள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

எந்தவொரு வழக்கு விசாரணையும் இன்றி பல ஆண்டுகளாக அவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். படிப்படியாக இந்த சிறைக் கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளப்படும் என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, 200 வருடங்களாக இலங்கையின் பொருளாதாரத்தை வளம்பெறச் செய்வதற்காக பாடுபடும் பெருந்தோட்ட மக்களை இலங்கை மக்களின் ஒரு பிரிவினராக மாற்ற வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் அறிந்துள்ளேன் என்றும், அது தொடர்பாக தாம் முழு அவதானம் செலுத்துவேன் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது கொள்ளை பிரகடன உரையின் போது தெரிவித்தார்.

9ஆவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று முற்பகல் ஆரம்பமானது. நாடாளுமன்றத்திற்கு வந்த ஜனாதிபதியை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வரவேற்றார்.

ஜனாதிபதியின் கொள்ளை பிரகடன உரையைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் நாளை (பெப்ரவரி 9) காலை 9.30 வரை ஒத்திவைக்கப்பட்டது.

You Might Also Like

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

Anarkali February 8, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article வைத்தியர்கள் பணிப் புறக்கணிப்பு! – நோயாளர்கள் அவதி!
Next Article சர்வதேச ரீதியான கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்ற கவிஞர் பசுவூர் கோபி!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!

You Might Also Like

இலங்கைச் செய்தி

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

June 26, 2025
இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?