By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய விசேட உரை
Share
Notification
Latest News
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா!
யாழ்ப்பாணம்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!
இலங்கைச் செய்தி
பழுகாமம் நெடுந்தீவாரின் சிவமுத்துமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிசேகம் !
நெடுந்தீவு
நெடுந்தீவு பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி.
நெடுந்தீவு
செம்மணியில் மண் மாதிரிகள் பகுப்பாய்வு!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய விசேட உரை
இலங்கைச் செய்தி

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய விசேட உரை

Last updated: 2023/08/10 at 3:49 AM
Published August 10, 2023 507 Views
Share
4 Min Read
SHARE

மாகாண சபை தேர்தல்  சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தம் தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டதன் பின்னர்  மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  பாராளுமன்றத்திற்கு நேற்று ( 09 ஜூலை) அறிவித்தார்.

மாகாண சபைகளுக்கான மூன்று வருட திட்டத்தையும் ஜனாதிபதி முன்வைத்தார்.

மாவட்ட விகிதாசார முறையில் தேர்தல் நடத்தல் , பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பளித்தல், பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 % அல்லது அதனை விடவும் அதிகரித்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி, மாகாண சபைத் தேர்தல் நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

மாகாண சபை செயற்படுத்தப்படும் வரை முன்னெடுக்க எதிர்பார்க்கும் புதிய திட்டம் தொடர்பிலும் ஜனாதிபதி விளக்கமளித்தார்.

மாகாண சபைகள் செயற்படும் வரை மாகாண ஆளுநர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஆலோசனை சபையொன்றை நியமிப்பதில்  கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக மாகாண மேற்பார்வைக் குழுத் தலைவர் அல்லது பிரதானிகள், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் மற்றும்   மாகாணத்தில் உள்ள அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மாகாண சபை முறையை நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்யும் நிறுவனமாக மேம்படுத்துவதற்கு சில யோசனைகளையும் ஜனாதிபதி முன்வைத்தார்.

1. பிரதேச செயலாளர்கள் நியமனம்

2. கல்வி தொடர்பான சேவைகளை நடைமுறைப்படுத்த தேவையான அதிகாரத்தை மாகாண சபைக்கு வழங்குதல்

3. தொழில், தொழில்நுட்ப பயிற்சி நடவடிக்கைகள் தொடர்பான சேவைகளுக்காக மாகாண மட்டத்தில்  சபைகளை நிறுவுதல்

4. பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு மாகாண சபைகளுக்கு அதிகாரமளித்தல்

5. விவசாயப் புத்தாக்கம், கீழ் மட்டத்திலான அனைத்து விவசாய சேவைகளையும்  வழங்க மாகாண சபைகளுக்கு அதிகாரமளித்தல்

6. மாகாண சுற்றுலா மேம்பாட்டு  சபைகளை நிறுவுதல்

7. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கைத்தொழில்கள் தொடர்பான வரையறையை 4 மில்லியன் ரூபாவில் இருந்து  250 மில்லியனாக உயர்த்த கைத்தொழில்கள் சட்டத்தில் திருத்தங்களைச் சேர்த்தல்.

8. மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட சில பணிகள் இன்னமும் மத்திய அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படுவதால் அந்த தவறை திருத்துதல்

9. 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் படி மாவட்ட அபிவிருத்தி சபைகளை நிறுவுதல்

என்பனவே அந்த யோசனைகள் ஆகும்.

இதேவேளை, இந்தியாவுடன் இணைந்து மேற்கொள்ள எதிர்பார்க்கும் திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி விளக்கமளித்தார்.

2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் தேசிய மின்சாரத் தேவையில் 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பூர்த்தி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அம்மோனியா உற்பத்தி மூலம் பிராந்தியத்தின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனைப் பயன்படுத்துவதே வடக்கு மற்றும் கிழக்கு அபிவிருத்தித் திட்டங்களின் முதன்மை நோக்கங்கள் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

முதலீடுகளை ஈர்ப்பது, கொழும்பு,  பூநகரி,  திருகோணமலை  துறைமுகங்களை பசுமை ஹைட்ரஜன் ஏற்றுமதி மையங்களாக மாற்றுவது அவற்றின் நோக்கமாக காணப்படுகிறது.

இந்த துறையில் கூட்டு முயற்சிகளை எளிதாக்க இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு சூரிய மற்றும் காற்றாலை சக்திக்கான முதலீடுகளையும் ஏற்றுமதிக்கு சாதகமான சூழலையும் உருவாக்கும் நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்ய அதானி குழுமம் முன்வந்துள்ளது.

இதேவேளை, நிலையான நல்லிணக்கத்தை உருவாக்குவதற்காக வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே தமது நோக்கம் எனவும் ஜனாதிபதி கூறினார்.

தேசிய நல்லிணக்கத்திற்கு அவசியமான விடயங்கள் தொடர்பில் தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பிலான யோசனைகள் குறித்து கலந்துரையாடி இணக்கப்பாடுகளை எட்டிய பின்னர், அதனை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்பிக்கவுள்ளதாகவும்  உரிய நடவடிக்கைகளின் பின்னர் சட்டமூலம் வர்த்தமானியில் அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.

உண்மையைக் கண்டறியும் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்திற்கு பணிப்பாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், சட்டமூல வரைவு அரசியலமைப்பிற்கு ஏற்புடையதா என்பதை அறிய சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

‘யுத்தத்தில் காணாமல் போன வடக்கு, கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த 203 பேருக்கு  ஜூலை 2023 ஆம் ஆண்டு வரை 40.6 மில்லியன் வழங்கப்பட்டுள்ளதோடு, இந்த செயல்முறை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது. வடக்கு கிழக்கு மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். OMP அலுவலகத்திற்கு கிடைத்த 21,374 முறைப்பாடுகளில், 3,462 மீதான விசாரணைகள் இதுவரை நிறைவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. மேலும், உண்மையைக் கண்டறியும் பொறிமுறையானது முழுமையாகச் செயற்பட ஆரம்பித்த பின்னர் அந்த பணிகளை துரிதப்படுத்த முடியும். காணாமல் போனோர் தொடர்பான தகவல்களைக் கோருபவர்கள் இடைக்காலச் செயலகத்தில் விரிவான தகவல்களைச் சமர்ப்பிப்பது சிறந்தது,’ என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

முப்படைகளால் விடுவிக்கப்படவுள்ள காணிகள்…

(i) இராணுவம் மற்றும் கடற்படையினரால் அடையாளம் காணப்பட்டுள்ள, யாழ்ப்பாணத்தில் 1.4 ஏக்கர், கிளிநொச்சியில் 13 ஏக்கர் மற்றும் முல்லைத்தீவில் 20 ஏக்கர் காணிகள் உடனடியாக விடுவிக்கப்படவுள்ளன.

(ii) யாழ்ப்பாணத்தில்  3 – 6 மாதங்களுக்குள் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பில் இராணுவத்தினால் அடையாளங் காணப்பட்டுள்ளன.

(iii) பலாலி இராணுவ முகாமில் இருந்து சுமார் 290 ஏக்கர் காணி விவசாயம் மற்றும் பருவகால பயிர்செய்கைகள் உள்ளிட்ட குறிப்பிட்ட நோக்கங்களுக்காக தற்காலிகமாக விடுவிக்கப்படவுள்ளன.

(iv) இராணுவத் தளபதியின் பணிப்புரையின் பேரில் வட மாகாணத்தில் தற்போதும்  விடுவிக்க முடியாத காணிகளை விடுவிப்பது தொடர்பிலான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளன.

You Might Also Like

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!

க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!

போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

SUB EDITOR August 10, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article யாழில் இரண்டு மாத காலப்பகுதிக்குள் 33 சிறுவர்கள் போதைக்கு அடிமை!
Next Article தொண்டைமானாறு அக்கரைக் கடலில் குளித்தவர் மரணம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா!
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!
பழுகாமம் நெடுந்தீவாரின் சிவமுத்துமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிசேகம் !
நெடுந்தீவு பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி.

You Might Also Like

இலங்கைச் செய்தி

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!

June 30, 2025
இலங்கைச் செய்தி

க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!

June 29, 2025
இலங்கைச் செய்தி

போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!

June 29, 2025
இலங்கைச் செய்தி

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

June 28, 2025
இலங்கைச் செய்தி

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

June 28, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

June 27, 2025
இலங்கைச் செய்தி

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

June 27, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?