நெடுந்தீவு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றையதினம் (மே 27) யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் நெடுந்தீவு பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான க. இளங்குமரன் தலைமையில் நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் நெடுந்தீவில் இடம்பெறவேண்டிய அபிவிருத்தி பணிகள் மற்றும் நடைமுறை செயற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டதாக தெரிய வருகின்றது.
இந்த நிலையில் இக்கூட்டத்தில் நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் இயங்குகின்ற அரச,அரச சார்பற்ற நிறுவனங்களின் திணைக்கள தலைவர்கள், அதன் தலைமையக அதிகாரிகள், ஆளுங்கட்சி யாழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
விரிவான செய்திக்கு இணைந்திருங்கள்…..