By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்
Share
Notification
Latest News
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > தீவகச் செய்தி > நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்
தீவகச் செய்தி

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

Last updated: 2022/11/23 at 4:26 AM
Published November 23, 2022 283 Views
Share
1 Min Read
SHARE

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன் குடும்பத்தினரின் நிதி அனுசரணையுடன், நயினாதீவு மத்தியவிளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (20 நவம்பர்) இடம்பெற்றது.

காலை 09 மணி முதல் பிற்பகல் 02.45 வரை நடைபெற்ற மேற்படி இரத்ததான முகாம் நிகழ்வில், மேற்படி விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், நயினாதீவு பிரதேச வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், நயினாதீவில் செயற்படும் ஏனைய விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் மற்றும் கிராமத்தவர்கள் உட்பட 51 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கினர்.

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவின் மருத்துவர் வைத்தியகலாநிதி மகேசு பிரதீபன், பொதுச் சுகாதார உத்தியோகத்தர் ரவினதாஸ் உள்ளிட்ட இரத்தவங்கிப் பிரிவினர் நேரடியாகக் கலந்துகொண்டு குருதிச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே நயினாதீவில் இரத்ததான முகாம் நிகழ்வை நடத்துவதற்குத் திட்டமிட்டபோதிலும்  கொரோனாத் தொற்று மற்றும் போக்குவரத்து நெருக்கடியினால் இரத்ததான முகாம் நிகழ்வை நடத்த முடியவில்லையென்பதுடன்  நயினாதீவில் முதற்தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றமை மகிழ்ச்சி தருவதாகவும் நயினா தீவு மத்திய விளையாட்டுக் கழகத்தின் தலைவர் சிவனேஸ்வரன் பிரதீப் தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறான இரத்ததான முகாம் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்துவதற்கு ஆவலாக உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்

இரத்ததான முகாம் நயினாதீவில் முதன் முறையாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது

You Might Also Like

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு!

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவத்தையொட்டி அரை மணிநேரத்துக்கு ஒரு சேவை!

குறிகாட்டுவான் துறைமுக மீளமைப்பு பணி ஆரம்பம்!!

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழாவை முன்னிட்டு ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்

குறிகாட்டுவானில் சுற்றுலாப் பயணிகள் இளைப்பாறும் மண்டபம்அமைப்பதற்கான திட்டமிடல்!!

தீவகத்தின் சபைகளில் தமிழரசு தனித்தே ஆட்சியமைக்கும் – உறுப்பினர்கள்தெரிவிப்பு!

SUB EDITOR November 23, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article கடவுச்சீட்டு கட்டணங்கள் அதிகரிக்கின்றன!
Next Article அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் மீள திறப்பு – கல்வி அமைச்சு
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

You Might Also Like

தீவகச் செய்தி

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

June 20, 2025
தீவகச் செய்தி

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

June 20, 2025
தீவகச் செய்தி

ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு!

June 20, 2025
தீவகச் செய்தி

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவத்தையொட்டி அரை மணிநேரத்துக்கு ஒரு சேவை!

June 20, 2025
தீவகச் செய்தி

குறிகாட்டுவான் துறைமுக மீளமைப்பு பணி ஆரம்பம்!!

June 18, 2025
தீவகச் செய்தி

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழாவை முன்னிட்டு ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்

June 18, 2025
தீவகச் செய்தி

குறிகாட்டுவானில் சுற்றுலாப் பயணிகள் இளைப்பாறும் மண்டபம்அமைப்பதற்கான திட்டமிடல்!!

June 17, 2025
தீவகச் செய்தி

தீவகத்தின் சபைகளில் தமிழரசு தனித்தே ஆட்சியமைக்கும் – உறுப்பினர்கள்தெரிவிப்பு!

June 16, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?