யாழ்ப்பாணம் – கொழும்பிற்க்கான வார இறுதி நாட்களில் சேவையைமேற்கொண்ட கடுகதி புகையிரத சேவை யூலை 7 முதல் தினசரி சேவையாகமுன்னெடுக்கப்படும் என யாழ்ப்பாணம் பிரதான புகையிரத நிலைய அத்தியட்சகர்தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் வார இறுதி நாள்களில் சேவையை முன்னெடுத்து வரும்குளிரூட்டப்பட்ட நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவையாக கல்கிசையிலிருந்து காங்கேசன்துறை வரைமுன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து கூறுகையில் …
பொதுமக்களால் புகையிரத திணைக்களம் மற்றும் துறைசார் தரப்பினரிடம்விடுத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதுவரைகாலமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் குறித்த புகையிரதம் தனதுசேவையை முன்னெடுத்துவந்தது.
இந்நிலையில் எதிர்வரும் 7 ஆம் திகதிமுதல் கல்கிசை புகையிரத நிலையத்தில்இருந்து காலை 5.15 மணிக்கு சேவையை முன்னெடுப்பதுடன் கொழும்புகோட்டையிலிருந்து காலை 5.45 இற்கு யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்து யாழ் புகையிரத நிலையத்தை மதியம் 11.49 இற்கு வந்தடையவுள்ளது. அதன்பின்னர் காங்கேசன்துறையை மதியம் 12.13 சென்றடையும்.
மீண்டும் பி. ப 1.50 க்கு காங்கேசன்துறையிலிருந்து தனது பயணத்தைஆரம்பிக்கும் குறித்த புகையிரதம் யாழ் புகையிரத நிலையத்திலிருந்து பி. ப 2.12 புறப்பட்டு கொழு்ம்பு கோட்டையை முன்னிரவு இரவு 8.33 சென்றடைவதுடன் அதேவேளை கல்கிசையை முன்னிரவு இரவு 8.55 இற்கு சென்றடையும்ஒழுங்கில் சேவையை முன்னெடுக்கவுள்ளது.
இதேநேரம் குறித்த கடுகதி புகையிரத சேவைக்கான ஆசன முற்பதிவுகள் அடுத்தஒருசில தினங்களில் மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்திருந்த யாழ்ப்பாணம்புகையிரத நிலைய அத்தியட்சகர் அதனை புகையிரத திணைக்களத்தின்அதிகாரபூர்வ இணையத்தில் முன்னெடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை இதுவரைகாலமும் காலை 5.45 க்கு கொழு்ம்பிலிருந்துயாழ்ப்பாணத்தை நோக்கி புறப்பட்ட யாழ் தேவி புகையிரதமானது எதிர்வரும் 07 ஆம் திகதிமுதல் காலை 6.35 மணிக்கு தனது சேவையைஆரம்பிக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.