தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் இன்றைய தினம் (மே 10) தெல்லிப்பழை பிரதேசத்தில் வசிக்கும் தொழில் வாய்ப்பினை எதிர்பார்த்திருக்கும், இளைஞர் மற்றும் யுவதிகளின் நன்மை கருதி தொழிற் சந்தை காலை 9.00 மணி தொடக்கம் நடைபெறவுள்ளது.
இந்த தொழில் சந்தை மூலம்
*நிபுணத்துவம் வாய்ந்த தொழில் வழிகாட்டல் வல்லுனர்களின் தனிப்பட்ட ரீதியான வழிகாட்டல்கள்
*வெளிநாடு சென்று உயர்கல்வியை மேற்கொள்வதற்கான வழிகாட்டல்கள்
*வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுக் கொள்வதற்கான வழிகாட்டல்
*உள்நாட்டிலும் முன்னனி நிறுவனங்களின் அலுவலக மற்றும் வெளிக்கள வேலைவாய்ப்புக்கள்
*உள்நாட்டிலும் உயர்கல்வியை தொடர்வதற்கான வாய்ப்புக்கள்
போன்ற பல சேவைகளையும் அது பற்றிய தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.
எனவே நடைபெறவுள்ள தொழிற் சந்தையில் கலந்து பயன் பெறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.