By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: குறிக்கட்டுவான் துறைமுகத்துக்கு நேரில் சென்ற டக்ளஸ் தேவானந்தா!
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
யாழ்ப்பாணம்
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
யாழ்ப்பாணம்
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!
தீவகச் செய்தி
வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணிக்கு ஏறியது கொடி!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > தீவகச் செய்தி > குறிக்கட்டுவான் துறைமுகத்துக்கு நேரில் சென்ற டக்ளஸ் தேவானந்தா!
தீவகச் செய்தி

குறிக்கட்டுவான் துறைமுகத்துக்கு நேரில் சென்ற டக்ளஸ் தேவானந்தா!

Last updated: 2023/11/25 at 8:32 PM
Published November 25, 2023 581 Views
Share
2 Min Read
SHARE

குறிக்கட்டுவான் துறைமுக பகுதியில் நெடுந்தீவு மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்ட பின்னர் இன்று(நவம்பர் 25) மாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரடி கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்து உள்ளார்.

இதன்போது அமைச்சருடன் வேலணை பிரதேச செயலாளர் ,நெடுந்தீவு பிரதேச செயலாளர் , நெடுந்தீவு உதவி பிரதேச செயலாளர் , வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வடமாகாண பணிப்பாளர் மற்றும் நெடுந்தீவு கடற்படை பொறுப்பதிகாரி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது பொதுமக்களை நேரடியாக சந்தித்து தீர்க்கப்பட்ட பிரச்சனைகள் தொடர்பில் அறிந்து கொண்டதுடன்
தொடர்ந்து ஏதாவது பிரச்சனைகள் எழுகின்ற போது நெடுந்தீவு பகுதி கடற்கரை பொறுப்பு அதிகாரியுடன் தொடர்பு கொண்டு அது தொடர்பாக முறையிட்டு அதற்கான தீர்வுகளை கண்டு கொள்ளுமாறு அமைச்சர் நெடுந்தீவு பிரதேச செயலாளர் , நெடுந்தீவு உதவி பிரதேச செயலாளர் ஆகியோரிடம் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறிகாட்டுவான் துறைமுகப் பகுதியில் உள்ள பயணிகள் தங்குமிடம் மழை காலங்களில் ஒழுகுவதினாலும் , தூவானம் அடிப்பதனாலும் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதனால் அதனை சீராக திருத்தம் செய்வதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் தெரிவித்ததுடன் , குறிகாட்டுவான் துறைமுகத்திலும் நயினாதீவு துறைமுகத்திலும் புதிய மலசலகூடங்களை அமைப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளும் மாறும் பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிகாட்டுவான் துறைமுகத்தில் படகுசேவை மற்றும் பயணிகள் ஒழுங்குபடுத்தலில் ஈடுபடுவதற்காக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இரு நேரக் கணிப்பாளர்களுக்கான சீருடைகளை தைப்பதற்குரிய செலவுக்கான பணத்தை அமைச்சர் நேரடியாகவே இன்றையதினம் ஒப்படைத்து சென்றமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

குமுதினிப்படகு சேவை தொடர்பாகவும் , வாரத்தில் 7 நாட்களும் சேவையில் ஈடுபடுவது தொடர்பில் படகு பணியாளர்களது சிரமங்கள் தொடர்பிலும் இங்கு படகோட்டியுடன் நேரடியாக ஆராயப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நெடுந்தீவில் இருந்து பயணிகள் படகு வருகின்ற போது துறைமுகத்தில் படகினை அணைப்பதற்கு சில தடங்கல்கள் காணப்பட்டமை , துறைமுகப் பகுதியில் உள்ள மலசல கூடங்கள் மற்றும் பயணிகள் தங்குமிடங்களின் துப்புரவுகள் , படகு ஏறச் செல்லும் பயணிகளுக்கு இருந்த தடைகள் மற்றும் பயணிகளுக்கான தண்ணீர் தாங்கி வைத்தல் ஆகிய பிரச்சினைகள் இருப்பது தொடர்பில் பொது மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை அடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைமுகப் பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்து பிரச்சனைகளை நேரடியாக பார்வையிட்டு அவற்றினை தீர்த்து வைத்தபின்னர் இன்றையதினம் நேரடியாக கண்காணிக்கும் வகையில் குறிக்கட்டுவான் துறைமுகத்திற்கு விஜயம் செய்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

You Might Also Like

நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!

வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணிக்கு ஏறியது கொடி!

நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!

வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.

வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!

நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

Anarkali November 25, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article கொக்குத்தொடுவாய் புதைகுழி வீதியின் ஊடாகப் பரந்து செல்லும் சாத்தியக்கூறு!
Next Article பொன்னாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!

You Might Also Like

தீவகச் செய்தி

நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!

June 26, 2025
தீவகச் செய்தி

வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணிக்கு ஏறியது கொடி!

June 26, 2025
தீவகச் செய்தி

நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!

June 25, 2025
தீவகச் செய்தி

வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.

June 24, 2025
தீவகச் செய்தி

வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!

June 24, 2025
தீவகச் செய்தி

நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!

June 23, 2025
தீவகச் செய்தி

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

June 20, 2025
தீவகச் செய்தி

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

June 20, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?