வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் குறிகாட்டுவான் துறைமுக அபிவிருத்தி தொடர்பான ஆலோசனை கூட்டமொன்று நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில், நாடாளுமன்ற அவைத்தலைவரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சராக விளங்கும் விமல் ரத்நாயக்கா, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம், பாராளுமன்ற உறுப்பினர்கள் கருணாநந்தன் இளங்குமரன், Dr. ஸ்ரீ பவானந்தராசா, ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், வேலணை பிரதேச செயலர் கந்தையா சிவகரன் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள், கடற்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.