வட்டுக்கோட்டை- மூளாயில் இன்றையதினம் (ஜூலை 20) இரு குழுக்கள்வன்முறையில் ஈடுபட்ட நிலையில் . பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிபிரயோகம் மேற்கொண்டு வன்முறையை கட்டுப்படுத்தியுடன் , வன்முறையில்ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவரை கைது செய்துள்ளனர்.
குறித்த வன்முறை சம்பவத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் தீக்கிரைஆக்கப்பட்டுள்ளதுடன் , மேலுமொரு மோட்டார் சைக்கிள் சேதமாக்கப்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மூளாய் பகுதியில் இரு தனி நபர்களுக்கு இடையில் நேற்றைய தினம்(ஜூலை 19) ஏற்பட்ட தர்க்கம் , வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் வரையில் சென்று , தீர்த்து வைக்கப்பட்டது.
அந்நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரு நபர்களின் பிரச்சனைமீண்டும் தலை தூக்கிய நிலையில் , அது அப்பகுதியை சேர்ந்தவர்களின்பிரச்சனையாக உரு மாறி இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அதன்போது மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டதுடன் , மற்றுமொருமோட்டார் சைக்கிள் அடித்து நொறுக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் அறிந்து வட்டுக்கோட்டை பொலிஸார் சம்பவ இடத்திற்குவிரைந்த வேளை பொலிஸார் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
அதனை அடுத்து பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம்மேற்கொண்டு அப்பகுதியில் குழுமி இருந்தவர்களை துரத்தினர்.
அத்துடன் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவரை கைதுசெய்துள்ளனர். ஏனையவர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களைகைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார்முன்னெடுத்து வருகின்றனர்