By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: யாழ்.போதனா மருத்துவமனையில்  அகற்றப்பட்ட சிறுமியின் கையை கொழும்பில் ஆய்வு செய்ய உத்தரவு!
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
யாழ்ப்பாணம்
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
யாழ்ப்பாணம்
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!
தீவகச் செய்தி
வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணிக்கு ஏறியது கொடி!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > யாழ்.போதனா மருத்துவமனையில்  அகற்றப்பட்ட சிறுமியின் கையை கொழும்பில் ஆய்வு செய்ய உத்தரவு!
யாழ்ப்பாணம்

யாழ்.போதனா மருத்துவமனையில்  அகற்றப்பட்ட சிறுமியின் கையை கொழும்பில் ஆய்வு செய்ய உத்தரவு!

Last updated: 2023/09/14 at 6:33 PM
Published September 14, 2023 463 Views
Share
1 Min Read
SHARE

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சலுக்காக சேர்க்கப்பட்ட சிறுமி ஒருவரின் கை மணிக்கட்டுக்கு கீழ் அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று(செப்ரெம்பர் 13) யாழ்ப்பாணம் மாவட்ட நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. விசாரணைகளின் பின்னர் வழக்கு எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அதன் விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று கடந்த வழக்குத் தவணையின்போது நீதிமன்றம் கட்டளையிட்டிருந்தது.

விசாரணைகள் இன்னமும் முடிவடையாத நிலையில், விசாரணைகளுக்கு இன்னமும் 10 நாள்கள் தேவை என்று நேற்றைய வழக்கு விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

அதேநேரம், சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை கொழும்புக்கு அனுப்பி பரிசோதனைகளை மேற்கொள்ளவும், கை அகற்றப்பட்டமைக்கான காரணத்தைக் கண்டறியவும் நீதிமன்று உத்தரவிட்டது. சிறுமியின் கை பரிந்துரைக்கப்பட்ட மருத்துவமனையில் பொலிஸார் ஊடாகக் கையளிக்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைக் குழு அறிக்கையை முழுமைப்படுத்திச் சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக வழக்கு எதிர்வரும் 27ஆம் திகதிக்குத் தவணையிடப்பட்டது.

சிறுமியின் சார்பாக சட்டத்தரணிகளான சர்மினி விக்னேஸ்ரன் மற்றும் லக்சன் செல்வராஜா ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி ஒருவரின் இடதுகையின் மணிக்கட்டுக்கு கீழ் அகற்றப்பட்டது.சிறுமியின் கை அகற்றப்பட்டமைக்கு விடுதியில் கடமையில் இருந்தவர்களின் அலட்சியமும், தவறுமே காரணம் என்று சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சிறுமியின் கையில் பொருத்தப்பட்ட கனுலா தவறாக பொருத்தப்பட்டமையால் சிறுமியின் கையில் இரத்த ஓட்டம் தடைப்பட்டு கையைத் துண்டிக்க வேண்டி ஏற்பட்டது என்றும் கூறப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில், சிறுமியின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெற்றோரின் முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸாரால் அந்த விடுதியில் கடமையில் இருந்தவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டிருந்தன. அங்கு கடமையில் இருந்த தாதி ஒருவருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று கடந்த வழக்குத் தவணையின்போது பயணத் தடை விதித்திருந்தது.

You Might Also Like

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

Anarkali September 14, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article கொரவுப்பொத்தானை மக்கள் யாழ் போதனாவுக்கு குருதிக்கொடை!
Next Article தாதியர் பயிற்சி நெறிக்கு இணைத்துக் கொள்ள விண்ணப்பம் கோரல்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!

You Might Also Like

யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

June 26, 2025
யாழ்ப்பாணம்

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

June 26, 2025
யாழ்ப்பாணம்

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

June 26, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

June 25, 2025
யாழ்ப்பாணம்

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

June 25, 2025
யாழ்ப்பாணம்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

June 25, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

June 24, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

June 23, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?