யாழ்ப்பாண சிறைச்சாலையில் இரு கைதிகளுக்கு இடையில் ஏற்பட்டவாய்த்தர்க்கம் சுடுநீர் வீச்சில் முடிவடைந்துள்ளது.
சிறைச்சாலையில் நேற்றைய தினம் (ஏப்ரல்16) கைதிகள் இருவருக்கு இடையில்சிறைச்சாலை சமையல் கூடத்தில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
அதனை அடுத்து ஒரு கைதி மற்றைய கைதி மீது கொதிநீரை வீசியுள்ளார். கொதிநீர் வீச்சுக்கு உள்ளனானவர் படுகாயமடைந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொதிநீரை வீசிய கைதி தொடர்பில் சிறைச்சாலை நிர்வாகம் விசாரணைகளைமுன்னெடுத்துள்ளதுடன் . பொலிஸார் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரியவருகின்றது.