தனது மனைவியை கொலைசெய்ததாக சந்தேகிக்கப்படும் கணவர் மனைவியின்தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள கொடூர சம்பவம் வவுனியாபுளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இன்று (ஜூன் 03) காலை புளியங்குளம் பொலிஸ்நிலையத்திற்கு மோட்டார்சைக்கிளில் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் கையில் இருந்த பொலித்தீன்பையினுள் தனது மனைவியின் தலை இருப்பதாகவும் அவரை கொலைசெய்துகாட்டுப்பகுதியில் எறிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பொலிஸார் குறித்த நபரை உடனடியாககைதுசெய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில்உயிரிழந்த பெண்ணின் உடல் சின்னப்பூவரசங்குளத்திற்கு அருகில்அமைந்துள்ள காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் அனந்தர்புளியங்குளம் நொச்சிகுளத்தை சேர்ந்தஆசிரியையான 32 வயதான சுகிர்தரன் சுவர்ணலதா என்ற பெண்ணேஉயிரிழந்துள்ளார். அவர் கர்ப்பிணிபெண் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளைமுன்னெடுத்துள்ளனர்.