சர்வதேச விளையாட்டு அரங்கங்கத்திற்கென வேலணைப் பிரதேச செயலகபிரிவிற்குட்பட்ட மண்டைதீவில் ஒதுக்கப்பட்ட காணியினைபார்வையிடுவதற்காக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறைஅமைச்சர் சுனில் குமார கமகேவின் குழுவினர் நேற்றைய தினம் (ஏப்ரல்10) மண்டைதீவிற்கு கள விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் , விளையாட்டு அரங்கினை மண்டைதீவில் அமைப்பதற்கு உறுதுணையாக குரல்கொடுப்பவருமான சனத் ஜயசூரிய பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ்ப்பாண பாதுகாப்பு படைகளின்தளபதி மேஜர் ஜெனரல் மனாடா யஹம்பத், வேலணை பிரதேச செயலாளர்க.சிவகரன், விளையாட்டு உத்தியோகத்தர், கிராம சேவையாளர்கள், களஉத்தியோகத்தர்கள், கிராம மக்கள் ஆகியோர் இக் கள விஜயத்தில் கலந்துகொண்டிருந்தனர்.