யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளை வாங்க சித்தியின் நகைகளை களவாடியகுற்றச்சாட்டில் 21 வயது இளைஞனையும் திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்டகுற்றச்சாட்டில் 03 இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த 03ஆம் திகதி 19 அரைபவுண் நகைகள் களவாடப்பட்டுள்ளதாக , கோப்பாய் பொலிஸ் நிலையத்தில்முறைப்பாடு செய்யப்பட்டது முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார்விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் , முறைப்பாட்டாளரின் வீட்டில் வசித்து வந்த , முறைப்பாட்டாளரின் அக்காவின் மகனே திருட்டில் ஈடுபட்ட சந்தேகத்தில்பொலிசாரினால் கைது செய்யப்பட்டார் கைது செய்யப்பட்டவரிடம்முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ,களவாடப்பட்ட நகையில்ஒரு தொகுதியும் , ஒரு தொகை பணமும் மீட்கப்பட்டுள்ளதுடன் , சந்தேக நபரிடம்இருந்து 2 கிராம் 400 மில்லி கிராம் உயிர்க்கொள்ளி போதைப்பொருளானஹெரோயினையும் மீட்டுள்ளனர்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில்திருட்டுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் மேலும் மூன்று இளைஞர்கள்கைது செய்யப்பட்டுள்ளனர் திருட்டில் ஈடுபட்டவர்கள் ,
போதைக்கு அடிமையானவர்கள் எனவும் , போதைப்பொருட்களை கொள்வனவுசெய்யவே திருட்டில் ஈடுபட்டதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகபொலிஸார் தெரிவித்தனர்.