கற்கடதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவில் இன்றையதினம் (மார்ச் 28 ) வெள்ளிக்கிழமை நற்கருணை பெருவிழா திருப்பலி மாலை 05:00 மணிக்கு திருச்செபமாலையும் திருச்சிலுவை பாதை தியானமும்இடம்பெற்றதை தொடர்ந்து பெருவிழா திருப்பலி கிளரீசியன் துறவறசபையின் அருட்பணியாளர்ம. அபிலஸ் அடிகளார் தலைமையேற்று ஒப்புக்கொடுத்துள்ளார்.
திருப்பலி நிறைவில் நற்கருணை பவனி இடம்பெற்றதுடன் நற்கருணை ஆசீர்வாதமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாளையதினம் ( மார்ச்29) சனிக்கிழமை காலை 06:30 மணிக்குதிருச்செபமாலையுடன் ஆரம்பமாகின்ற திருவிழா திருப்பலி புனிதரின்திருச்சுரூப பவனி மற்றும் ஆசீருடன் நிறைவடையும்.