பகுப்பாய்வு ஆய்வு முடியும் வரை பொலிசாரின் கட்டுப்பாட்டில் மருந்துக் களஞ்சியம்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ் போதனா வைத்தியசாலையின் எரிந்து நாசமான மருத்துக் களஞ்சியப் பிரதேசம் பகுப்பாய்வு திணைக்களத்தின் ஆய்வுகள் நடைபெறும் வரை பொலிசாரின் கட்டுப்பாட்டில் இருக்கும் என தெரிவித்துள்ள யாழ் போதனா வைத்தியசாலையின் முன்னாள் உதவிப் பணிப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீபவானந்தராஜா குறித்த அனர்த்தத்தினால் வைத்தியசாலக்கு பல கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Screenshot

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் ,

இன்று அதிகாலை 1.30 அளவில் குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிகின்றது. யாழ் போதனாவின் பிரதான மருந்து களஞ்சியத்தில்   புற்றுநோய்  உள்ளிட்ட அதி தீவிர சிகிச்சைககான பிரதான மருந்துகள் எரிந்து நாசமாகியுள்ளன.

தற்போது இது தொடர்பான உள்ளக விசாரணைகள், மற்றும் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்

Share this Article