கண்டி – பஹிரவகந்த பகுதியில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தச் சம்பவத்தில் மனம் கூசும் மற்றும் ஒரு அதிர்ச்சித் தகவல் என்னவென்றால், பாதிக்கப்பட்ட சிறுமியின் சொந்த சிறிய தந்தையே, அதாவது தந்தையினுடைய சகோதரரே இந்த விபரீத செயலில் ஈடுபட்ட பிக்கு என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சொந்த இரத்த உறவே இத்தகைய துரோகத்தை இழைத்துள்ளமை ஒட்டுமொத்தப் பகுதியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த குற்றச்சாட்டின் கீழ், சம்பந்தப்பட்ட 25 வயதுடைய பிக்குவை கடந்த 20ஆம் திகதி கண்டி பொலிஸார் அதிரடியாகக் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, அவர் 21ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது, இந்த வழக்கை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபரான பிக்குவை நேற்று (01/06) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
இதேவேளை, இந்த விபரீத குற்றத்திற்கு உடந்தையாகச் செயற்பட்டார் மற்றும் உதவினார் என்ற குற்றச்சாட்டின் கீழ், பெண் ஒருவரும் கடந்த 20ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். எனினும், நீதிமன்ற விசாரணைகளின் போது அவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து கண்டி பொலிஸார் இணைந்து மிகத் தீவிரமான மேல்நிலை விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.