போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்றநூற்றுக்கும் அதிகமானோர் கடந்த ஜனவரி மாதத்தில் கைது செய்யப்பட்டதாகஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ஹட்டன் பிரதேச பொலிஸ்கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர,
“போதைப்பொருளற்ற சிவனொளிபாதமலை யாத்திரை ” என்றதொனிப்பொருளின் கீழ் வெவ்வேறு வகையிலான போதைப்பொருட்களுடன்சிவனொளிபாதமலை யாத்திரைக்கு வருபவர்களை கைது செய்வதற்காகதற்போது பல சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இலங்கையின் வெவ்வேறு பிரதேசங்களிலிருந்து ரயில் , பேருந்து உட்படதனியார் வாகனங்களில் சிவனொளிபாதமலை யாத்திரைக்கு வருகைத்தருபவர்களை சோதனை செய்ய ஹட்டன் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர்.
அந்த சோதனைகளின் பின்னர் கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் வெவ்வேறானபோதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலை யாத்திரைக்கு வருகைத் தந்தசுமார் 106 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஹட்டன் நீதிமன்றில்முன்னலைப்படுத்தப்பட்ட பின்னர் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வெவ்வேறான போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலை யாத்திரைக்குவருகைத் தருபவர்களை கைது செய்வதற்கான சோதனை நடவடிக்கைகள்எதிர்காலத்திலும் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.