யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்அறிவிக்கப்படாத சொத்துக்களை வைத்திருப்பதாக சிவில் ஆர்வலர் சஞ்சய்மஹாவத்த என்பவர் புலனாய்வுப் பிரிவில் குற்றச்சாட்டை தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குறித்த குற்றச்சாட்டுகளைமறுத்துள்ளதுடன் விசாரணைக்கும் முழுமையாக ஒத்துழைக்கத் தான் தயாராகஇருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழரசுக்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இதன்பின்னணியில் இருப்பதாகவும் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.
ஊடக நேர்காணல் ஒன்றிற்கான கருத்து தெரிவிக்கைம் போதே சிறீதரன் அதன்உண்மைதன்மைகளை தெளிவுப்படுத்தியுள்ளதுடன்
கடந்த 10 வருடங்களாக சொத்துக்குவிப்புக்களை வெளிபடுத்தும் நாடாளுமன்றஉறுப்பினர்களில் நானும் ஒருவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.