காங்கேசன்துறையில் மிக விரைவில் எரிபொருள் களஞ்சிய சாலையில்எரிபொருட்களை சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில்நேற்றையதினம் (ஜூன் 08) புதிய எரிபொருள் களஞ்சியசாலை அங்குரார்ப்பணநிகழ்வு இடம்பெற்றது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்திஅமைச்சர் குமார ஜெயக்கொடி ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்மேற்கொண்டு குறித்த நிலையத்தினை ஆரம்பித்து வைத்தனர்.
அதேவேளை, யாழ்ப்பாணத்திற்கு புகையிரதத்தில் எரிபொருட்களை எடுத்துவருவதற்கான முயற்சிகளையும் விரைவில் எடுக்கவுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது.
நிகழ்வில் , கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இலங்கைபெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தேசிய மக்கள்சக்தியின் யாழ். நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் ஆகியோரும், தேசிய மக்கள் சக்தியின் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர்கலந்து கொண்டனர்