By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: காங்கேசன்துறை-நாகை கப்பல் சேவை பல்வேறு வசதிகளுடன் ஜனவரி மாதத்தில் மீண்டும் தொடங்குகிறது.
Share
Notification
Latest News
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > காங்கேசன்துறை-நாகை கப்பல் சேவை பல்வேறு வசதிகளுடன் ஜனவரி மாதத்தில் மீண்டும் தொடங்குகிறது.
யாழ்ப்பாணம்

காங்கேசன்துறை-நாகை கப்பல் சேவை பல்வேறு வசதிகளுடன் ஜனவரி மாதத்தில் மீண்டும் தொடங்குகிறது.

Last updated: 2024/12/15 at 3:55 PM
Published December 15, 2024 227 Views
Share
1 Min Read
SHARE

காங்கேசன்துறை-நாகப்பட்டினம் கப்பல் சேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் மீண்டும் வாரம் ஆறு நாட்கள் மேம்பட்ட வசதிகளுடன் தொடங்கப்படும் என்று சுபம் குழுமத்தின் தலைவர் மற்றும் காங்கேசன்துறை-நாகப்பட்டினம் கப்பல் சேவை முதலீட்டாளர் பொன்னுசாமி சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.

இன்று (டிசம்பர் 15) யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.

சுபம் குழுமம் இந்தியாவில் பல்வேறு வணிக நிறுவனங்களை உள்ளடக்கியது என அவர் விளக்கினார். குறிப்பாக, 500க்கும் மேற்பட்ட பாரவூர்தி போக்குவரத்து சேவைகளை வழங்கும் நிறுவனமாக இயங்கி வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட காங்கேசன்துறை-நாகப்பட்டினம் கப்பல் சேவை, காலநிலை முன்னெச்சரிக்கையின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இது மீண்டும் ஜனவரி மாதத்தில் தொடங்கப்படும், மேலும் இது சுபம் குழுமத்தின் நேரடி மேலாண்மையில் இயங்கும் என்று அவர் தெரிவித்தார்.

சேவை மீளத் தொடங்கும் போது மேம்பட்ட வசதிகள் வழங்கப்படும். பயணக் கட்டணம் இருவழிக்கானது ₹9700 இல் இருந்து ₹8500 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 10 கிலோ வரை இலவச சுமை அனுமதி வழங்கப்படும், அதிக எடையுடைய சுமைக்கு மேலதிக கட்டணம் செலுத்த வேண்டும்.

பயணிகளுக்கான உணவு வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. காலை உணவுக்கு இட்லி, பொங்கல், நண்பகல் உணவுக்கு மரக்கறி பிரியாணி போன்றவை பயணக் கட்டணத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், பசும்பாலில் தயாரிக்கப்பட்ட தேநீர், காப்பி, மற்றும் குளிர்பானங்கள் இலவசமாக வழங்கப்படும்.

சிறப்பு வரிச்சலுகையுடன் பொருட்கள் விற்பனை செய்யும் நிலையம் கப்பலில் அமைக்கப்படும். பயணச்சீட்டு முன்பதிவு sailsubham.com இணையதளத்தின் மூலம் செய்யப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

சுற்றுலாப் பயணிகளை மையமாகக் கொண்டு குறைந்த செலவில் பயண திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது வட மாகாணத்தின் பல சிறப்புகளை பயணிகளுக்கு அனுபவிக்க வாய்ப்பளிக்கும் என அவர் கூறினார்.

சுபம் குழுமம் தொடர்ச்சியாக மேம்பட்ட சேவையை வழங்கும் உறுதிப்பாட்டில் உள்ளது என அவர் அழுத்தமாகத் தெரிவித்தார்.

You Might Also Like

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமனம்!!

கரித்தாஸ் கீயூடெக் செற்றிட்டங்கள் – யாழ் அரசாங்க அதிபருடன் சந்திப்பு!

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி 175 மாபெரும் உதைபந்தாட்டப் போட்டி !

SUB EDITOR December 15, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article யாழில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 23 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Next Article காரைநகரில் கசூரினா கடலில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞரும் யுவதியும்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

You Might Also Like

யாழ்ப்பாணம்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

June 21, 2025
யாழ்ப்பாணம்

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

June 21, 2025
யாழ்ப்பாணம்

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

June 21, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமனம்!!

June 20, 2025
யாழ்ப்பாணம்

கரித்தாஸ் கீயூடெக் செற்றிட்டங்கள் – யாழ் அரசாங்க அதிபருடன் சந்திப்பு!

June 19, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி 175 மாபெரும் உதைபந்தாட்டப் போட்டி !

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?