ஐரோப்பாவிலேயே மிக உயரமானது எனக் கருதப்படும் புனித கன்னி மரியாவின் Virgin Mary பிரம்மாண்ட சிலை ஒன்று, போலந்தின் புகழ்பெற்ற கம்யூனிச எதிர்ப்புத் தலைவரான லேக் வலேசா முன்னிலையில் சனிக்கிழமையன்று ஒரு சிறிய போலந்து கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டது.
மத்திய போலந்தில் அமைந்துள்ள, 150-க்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட கோனோடோபி கிராமத்தில், 55.6 மீட்டர் (182 அடி) உயரத்தில் கம்பீரமாக நிற்கும் இந்த நினைவிடத்தின் புனிதப்படுத்தும் விழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.