நாளைய தினம் (மே 06) நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள்தேர்தல்கள் தொடர்பாக, வாக்குப் பெட்டிகளுடன் சிரேஷ்ட தலைமை தாங்கும்அலுவலகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் முதல் பேரூந்துக்களில் – ஊர்காவற்றுறை பிரதேச்சபைக்கான வாக்களிப்பு நிலையத்திற்குச்செல்லும்முதலாவது பேரூந்து இன்றைய தினம் (மே 05) காலை 8.15 மணியளவில் புறப்பட்டது.
இதன்போது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், பிரதித் தேர்தல் ஆணையாளர் இ. சசீலன் அவர்களும், தேர்தல் கடமைக்காக இணைக்கப்பட்டசுகாதார அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் பொ. தயானந்தன்அவர்களும், மேலதிக அரசாங்க அதிபரும் (காணி) நலனோம்பல் உதவித்தெரிவத்தாட்சி அலுவலருமான க.ஸ்ரீமோகனன் அவர்களும் மற்றும் உதவித்தெரிவத்தாட்சி அலுவலர்களும் முதலாவதாக செல்லும் அலுவலர்களை வாழ்த்திவழி அனுப்பிவைத்தனர்.