ஈரானிய போர்க்கப்பலான ஐஆர்ஐஎஸ் தேனா மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் என்று அமெரிக்கா இலங்கைக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க உள் வெளியுறவுத்துறையின் கேபிள் பிரிவு இந்த தகவலை வழங்கியுள்ளதாக குறித்த செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காலியில் இருந்து சுமார் 19 கடல் மைல் தொலைவில் புதன்கிழமை இந்தியப் பெருங்கடலில் ஒரு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஈரானிய ஐஆர்ஐஎஸ் தேனா போர்க்கப்பலை மூழ்கடித்தது.
இதன்போது பலர் கொல்லப்பட்டதுடன் ஏனையவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இதனை தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை, இலங்கை இரண்டாவது ஈரானிய கப்பலான ஐஆர்ஐஎஸ் பூஷெரிலிருந்து 208 பணியாளர்களை மீட்டது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, எந்த நாட்டிற்கும் ஆதரவாக இல்லை, ஆனால் தனது நாட்டிற்கு பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் செல்ல மனிதாபிமான பொறுப்பு தமக்கு இருப்பதாகக் கூறினார்.
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத் “அமைதியான மரணம்” என்று விவரித்த டெனா கப்பலின் டார்பிடோ தாக்குதல், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவின் முதல் நடவடிக்கையாகும்.
மேலும், ஈரான் மீதான மோதலின் புவியியல் நோக்கம் விரிவடைந்து வருவதற்கான தெளிவான அறிகுறியாகவும் இது பார்க்கப்பட்டது.
இந்நிலையில், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு பொறுப்பான ஜெய்ன் ஹோவெல், ஈரானில் இருந்து வந்த இரண்டாவது கப்பலான பூஷெரில் இருந்தவர்களையோ அல்லது தேனாவில் உயிர் பிழைத்த 32 பேரையோ ஈரானுக்கு திருப்பி அனுப்பக்கூடாது என்று இலங்கை அரசாங்கத்திற்கு வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.