இன்று (மார்ச் 11) நள்ளிரவுக்குப் பிறகு, 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சாதாரண தர) பரீட்சை தொடர்பாக மேலதிக வகுப்புகள் நடத்தப்படக் கூடாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை மீறி வகுப்புகள் நடத்தப்பட்டால், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி காலக்கட்டத்தில் மேலதிக வகுப்புகள் நடத்தப்பட்டால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களின் மூலம் தகவல் வழங்கலாம்:
📞 பொலிஸ் தலைமையகம் – 011 242 1111
📞 பொலிஸ் அவசர இலக்கம் – 119
📞 இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் – 1911
📞 பாடசாலை பரீட்சை அமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளை – 011 278 4208 / 011 278 4537
மார்ச் 11 நள்ளிரவிலிருந்து, க.பொ.த (O/L) பரீட்சையை முன்னிட்டு மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள், சமூக ஊடகங்கள் மற்றும் பிற மின்னணு ஊடகங்கள் மூலம் உதவி வழங்குதல் ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளன என்பதை தேர்தல் ஆணைக்குழு கடந்த மார்ச் 7 ஆம் தேதி அறிவித்திருந்தது.
இதற்கிடையில், 2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை மார்ச் 17ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.