குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்றவருக்கு 10 லட்சம் அபராதம்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

 நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்ததற்காக, கரடகொல்ல – நஃபோரா எல்ல பகுதியில் அமைந்துள்ள  நிறுவனத்திற்கு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் 10 லட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் விதிகளை மீறியதற்காக, பதுளை மாவட்ட விசாரணை அதிகாரிகள் இந்த ஹோட்டலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டனர்.

2026 ஜூலை 10 அன்று மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, குறித்த ஹோட்டல் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த

து கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்கு ஜூலை 22 அன்று பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஹோட்டல் நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டது. அதனைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த அபராதத்தை விதித்தது.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை மீறும் ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்கள் குறித்து அலுவலக நேரங்களில் 1977 என்ற ஹாட்லைன் இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு புகாரளிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது

Share this Article
Leave a comment