பதிலடியை தொடங்கியுள்ள ஈரான்!!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் ஏவுகணைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

அந்த ஏவுகணை, பாக்தாத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள கடுமையாக பாதுகாக்கப்படும் Green Zone பகுதியிலுள்ள தூதரக வளாகத்தின் எல்லைக்குள் விழுந்ததாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அங்கு ஈராக் அரசாங்க நிறுவனங்களும் பல வெளிநாட்டு தூதரகங்களும் அமைந்துள்ளன.

ஊடகங்களுடன் பேச அனுமதி இல்லாததால், அவர்கள் தங்கள் பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் தகவல் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து United States Embassy in Baghdad உடனடியாக எந்த அதிகாரப்பூர்வ கருத்தும் வெளியிடவில்லை.

தாக்குதலுக்குப் பிறகு தூதரக வளாகத்திலிருந்து புகை எழுவதைக் காட்டும் காணொளிகளை சமூக ஊடகப் பயனர்கள் பகிர்ந்துள்ளனர்.

இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டதா அல்லது சேதம் எவ்வளவு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல் இல்லை என்று கூறப்படுகின்றது.

அமெரிக்க தூதரக பணியாளர்கள் தற்போது “பொதுமக்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்து இருக்கலாம்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Share this Article