யாழ். மாவட்டத்தின் கலை, கலாசார உயர்ச்சிக்காகவும், மக்களின் கலாசார மேம்பாட்டிற்காகவும் அர்ப்பணிப்போடு சேவையாற்றியமைக்காக கலாபூசணம் விருது பெற்ற வேலாயுதம் நந்தகுமார் – அண்ணாவியாரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவால் பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
