மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதான அபிவிருத்தி கலந்துரையாடல்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மண்டைதீவில் அமைக்கப்பட்டுவரும் சர்வதேச கிரிக்கெட் மைதான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் நேற்றையதினம் (18.02) காலை மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

விளையாட்டுத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.பி.என்.எம்.விக்ரமசிங்க மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் எஸ். அச்சுதன்  ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் வேலணை பிரதேச சபையின் தவிசாளர்  எஸ். அசோக், ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினருமான எஸ்.கபிலன், விளையாட்டு அமைச்சின் பணிப்பாளர்  டிலும் தயாரத்தின, இலங்கை கிரிக்கெட் சங்கத்தினைச் சேர்ந்த சாலக்கா என்.சில்வா மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் ஸ்ரீ  பெரேரா,   மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், வேலணை பிரதேச செயலாளர் ரி.அகிலன்,  மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இ. சுரேந்திரன்நாதன், உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தா்சினி, நில அளவைகள் திணைக்கள சிரேஷ்ட அத்தியட்சகர் எம். தர்மபால, மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள் மற்றும்  மற்றும் துறை சார் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

Share this Article
Leave a comment